ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்தை வெளியிட தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு அளித்துள்ளது.
கொம்பன் படத்தில் சாதிய மோதலை தூண்டும் வசனங்கள் இருப்பதாகவும், படம் வெளியானால், தென்மாவட்டங்களில் பெரிய அளவிலான வன்முறை ஏற்படும் என்றும், படத்தை விடுமுறை நாளில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தை மீண்டும் தணிக்கை குழுவினர் பார்த்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன் மற்றும் ஆறுமுக பெருமாள் ஆதித்தன். நீதிபதிகள், தயாரிப்பாளர், கிருஷ்ணசாமி தரப்பினர் என 10 பேர் கொண்ட குழு, படத்தை பார்த்து, நீதிபதிகள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே, அவர்களுக்கு நேற்று படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. கிருஷ்ணசாமி தரப்பினர், படத்தை தொடர்ந்து மறுமுறை போட்டு காட்ட வலியுறுத்தியதை தொடர்ந்து கோபமுற்ற நீதிபதிகள், பாதியிலேயே ப்ரிவியூ தியேட்டரிலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், நீதிபதிகள் இப்படம் குறித்த அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். நேற்று பிற்பகலில், இருதரப்பு வாதம் நடைபெற்றது. வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இந்த வழக்கு, தமிழ்வாணன் உள்ளிட்ட நீதிபதிகள் குழு முன் இன்று விசாரணைக்கு வந்தது. படத்தை வெளியிட தடை இல்லை என்றும், மனுதாரர்கள், ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்து இருந்தால், முறையீடு செய்துகொள்ளலாம் என்று தீர்ப்பளித்தனர். மேலும் கிருஷ்ணசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன்மூலம், கொம்பன் படத்திற்கு எழுந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதோடு தியேட்டர்களிலும் படம் இன்றே ரிலீஸாகியுள்ளது.