ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அபிஷேக் பச்சன், தற்போது உமேஷ் சுக்லா இயக்கும், ''ஆல் இஸ் வெல்'' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இவர் படப்பிடிப்பில் இருந்தபோது ஷூட்டிங் முடித்துவிட்டு ஓய்வில் இருந்தார். அப்போது அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து விளையாடி மகிழ்வதை கண்டார். இதை பார்த்ததும் உற்சாகமான அபிஷேக் பச்சனும் மாணவர்களுடன் விளையாட தொடங்கிவிட்டார்.
அபிஷேக் பச்சன் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கூடைப்பந்து விளையாட்டில் அலாதி பிரியம் கொண்டவர். சின்ன வயதில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறார். சமீபத்தில், மாடிசன் ஸ்குயர் கார்டனில் நடந்த என்பிஏ., விளையாட்டு போட்டியின் தூதராக இருந்தார். மேலும் அங்கு ஐந்து நாட்கள் தங்கி விளையாட்டு வீரர்களுடன் தனது பொழுதையும் கழித்ததோடு அவர்களோடு விளையாடியும் மகிழ்ந்துள்ளார் அபிஷேக்.