ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 27ந் தேதி வெளிவந்த படம் நதிகள் நனைவதில்லை. பிரணவ், மோனிகா, ரிஷா, கல்யாணி நடித்த இந்தப் படத்தை காமராஜ், அய்யாவழி படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து, இயக்கி இருந்தார். திரையிட்ட இரண்டே நாட்களில் படத்தை தியேட்டரை விட்டு தூக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எனது வீட்டை விற்று மூன்றரை கோடி ரூபாய் செலவில் நதிகள் நனைவதில்லை படத்தை தயாரித்து, இயக்கினேன். மற்றொரு வீட்டை விற்றுத்தான் படத்தை வெளியிட்டேன். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் இதைச் செய்தேன். நதிகள் நனைவதில்லை படத்தை பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் தமிழ் படம் தயாரிப்பது தற்கொலை செய்வதற்கு சமம் என்பதை உணர்ந்து விட்டேன்.
ஒரு படத்தை இயக்குவது வரம் என்றால், அதை தயாரிப்பது பாவம் என்பதையும் உணர்ந்து கொண்டேன். புதிய படங்களுக்கு மவுத்டாக் மூலம்தான் விளம்பரம் கிடைக்கும். அதற்கு ஒரு சில நாட்கள் ஆகும். அதுவரை காத்திருக்காமல் படத்தை தியேட்டாரில் இருந்து தூக்குவது உலக மகா குற்றமாகும்.
ஆபரேஷன் தியேட்டரை தவிர மற்ற அனைத்து தியேட்டர்களிலும் தங்கள் படமே ஓட வேண்டும் என்று நினைக்கிற சில பேராசைக்காரர்களால் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள். வியாழக்கிழமை வரை செல்வந்தர்களாக இருக்கும் தயாரிப்பாளர்கள், வெள்ளிக்கிழமை பிச்சைக்காரராகி விடுகிறார்கள் அந்த பட்டியலில் இப்போது நானும் சேர்ந்து விட்டேன்.
சிறு பட்ஜெட் படங்கள் குறைந்த பட்சம் 2 வாரங்கள் தியேட்டரில் ஓடுவதற்கு வழி செய்ய வேண்டும். திரைப்பட சங்கங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சினிமா பொதுவாக இருக்க வேண்டும். அது ஒரு சிலரின் சட்டை பைக்குள் சிறைபட்டிருப்பது எடிசனுக்கே அடுக்காது. சிறு பட்ஜெட்டில் படம் தயாரிக்க ஆசைப் படுகிறவர்கள் அந்த ஆசையை அறவே மறந்து விடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் கூறியுள்ளார்.