ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை சிருஷ்டி டாங்கே தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அவற்றில் முக்கியமானது விஜய் வசந்துடன் நடிக்கும் அச்சமின்றி. இதனை விஜய் வசந்தின் தம்பி வினோத்குமார் தயாரிக்கிறார். சமுத்திரக்கனி, கருணாஸ், சரண்யா, பரத் ரெட்டி, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஏ.வெங்டேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார்.
இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னை விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்து வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியை முன்னதாகவே எடுத்து வருகிறார்கள். கடந்த நான்கு நாட்களாக விஜய் வசந்த் வில்லன்களுடன் மோதி சிருஷ்டி டாங்கேவை காப்பாற்றுகிற காட்சியை எடுத்தார்கள். இதில் விஜய் வசந்த், சிருஷ்டியை தரதரவென இழுத்துச் செல்லும் காட்சியில் கீழே கிடந்த இரும்பி கம்பி தடுக்கி கீழே விழுந்தார் சிருஷ்டி. இதனால் அவருக்கு காலில் சதைபிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சிருஷ்டி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டது. மறுநாள் முதல் சிருஷ்டி நடிக்க ஆரம்பித்தார்.
"நாங்கள் டூப் போட்டு எடுத்துக் கொள்கிறோம் என்றுதான் சிருஷ்டியிடம் கூறினோம். அவர்தான் நானே நடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுத்தார். பலத்த காயம் ஏற்பட்டாலும் மறுநாளே நடிக்க வந்தார். அவரது டெடிக்கேஷனை பார்த்து பிரமித்து விட்டோம்" என்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.