கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தேசிய விருது அறிவிக்கும் போதெல்லாம் தமிழ் சினிமாவிற்கு எத்தனை விருதுகள் கிடைத்துள்ளது என்ற எதிர்பார்ப்பு எப்போதும் நம்மிடம் உண்டு. எப்போதும்
இல்லாத அளவிற்கு இம்முறை 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி. தேர்வு குழுவின் தலைவராக இருந்த இயக்குநர் பாரதிராஜா சரியான படைப்பாளிகளை
தேர்ந்தெடுத்து விருதுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். சிறந்த தமிழ் படமாக 'குற்றம் கடிதல்' தேர்வாகியுள்ளது.
அதன் இயக்குநர் பிரம்மாவுடன் ஒரு நேர்காணல்...
உங்களை பற்றி...
சொந்த ஊர் சங்கரன்கோவில். சென்னையில் எம்.பி.ஏ., படித்தேன். நலந்தானா என்ற தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து, பின் தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு மையத்தில் இணை இயக்குநராகவும், ஊரக வளர்ச்சி துறையிலும் பணியாற்றினேன்.
சினிமா இயக்குநரானது எப்படி?
கல்லூரியில் படிக்கும் போது 500க்கும் மேற்பட்ட வீதி நாடகங்கள் இயக்கியிருக்கிறேன். 'பழைய சித்திரம், புதிய சுவர்' என்ற குறும்படம் ஒன்றும் இயக்கியுள்ளேன். இந்த அனுபவங்கள் தான் என்னை சினிமா இயக்குநராக்கியது.
குற்றம் கடிதல் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
என் நண்பர் கிறிஸ்டி என் நாடக ஆர்வத்தை பார்த்து விழிப்புணர்விற்காக ஓட்டு போடுவது குறித்து 'ஜஸ்ட் ஓட்' என்ற படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். இது தான் 'குற்றம் கடிதல்' எடுக்க தூண்டியது. என் நண்பரே தயாரிப்பாளராக இருந்ததால் வாய்ப்பு தேடி அலையும் புதுமுக இயக்குநர்கள் போல நான் சிரமப்படவில்லை.
குற்றம் கடிதல் கதையின் சுருக்கம்
ஆசிரியர் - மாணவனுக்கு இடையே நடக்கும் சம்பவம் தான் மையக் கதை. வெவ்வேறு விதமான மக்கள் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தால் தங்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்தி கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறேன். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரது உணர்வுகளையும் பிரதிபலிக்கும் படம் இது. படம் ஒரு நாள் காலையில் ஆரம்பித்து, மறுநாள் காலையில் முடியும் வகையில் நகர்கிறது.
படத்தில் நடித்த நடிகர்கள்...
ராதிகா பிரசித்தா, சாய் ராஜ்குமார், பாவல் நவகீதன். குட்டி பையனா அஜய் நடிச்சிருக்கான். அனைவரும் நாடகத்தில் நடித்து அனுபவம் பெற்றவர்கள்.
என்ன கருத்து சொல்லியிருக்கீங்க?
என்னை விட அனுபவமுள்ள கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால சொல்ல எனக்கும் விருப்பம் இல்லை. இளைஞர்களை யோசிக்க வைத்து அவர்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
உங்கள் படம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமா?
இந்த படம் ஒரு சிறிய படைப்பு தான். இந்த படத்தை நாங்கள் எடுக்க காரணம் என்ன என்பதை ரசிகர்கள் படம் பார்க்கும் போது தெரிந்து கொள்வார்கள். சமூகம் சார்ந்த
விஷயங்களை அலசும் படத்தை பார்ப்பவர்கள் தன்னை தானே உணர்வார்கள்.
முதல் படத்துலயே தேசிய விருது வாங்கிட்டீங்களே?
என்னை கொஞ்சம் பக்குவப்படுத்தியிருக்கு. இந்த விருது. இன்னும் நிறைய நல்ல படங்களை இயக்க தூண்டியிருக்கு. தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் தரமான படங்களை இயக்குவேன்.