ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் ஹோக்லியும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், ஆனால் இப்போது அது விஷயம் அல்ல, உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வியை தழுவி, உலககோப்பை போட்டியிலிருந்து வௌியேறியது. இந்திய அணி தோல்வி அடைந்ததில் இருந்து அனுஷ்கா சர்மாவையும், விராட் ஹோக்லியையும் சமூக வலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர் ரசிகர்கள்...
இந்நிலையில், அனுஷ்கா சர்மா வீட்டில் கல் எறியுங்கள் என்று ரசிகர்களை தூண்டுவதோடு தனது ஆவேசத்தையும் கொட்டி தீர்த்துள்ளார் இந்தி நடிகர் கமல் ரஷித்கான்.
இதுகுறித்து கமல் ரஷித்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, விராட் ஹோக்லி சரியாக ஆடாததற்கு அனுஷ்கா சர்மா சிட்னி போனது தான் காரணம், எனவே ரசிகர்கள் அவரது வீட்டின் மீது கல் எறியுங்கள், அவரது படங்களையும் புறக்கணியுங்கள் என்று கூறியுள்ளார்.
ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது நீரோ மன்னர் பிடில் வாசித்து கொண்டிருந்தாராம்... என்று ஒரு பழமொழி சொல்வார்களே... அதுபோல், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை, ஹோக்லியையும், அனுஷ்காவையும் சமூக வலைதளங்களில் தீட்டி தீர்த்து வரும் வேளையில், இருவரும் ஜோடி சேர்ந்த படி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தனர்.