ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இர்பான், ரக்ஷிதா, பேரரசு, ஆதவன், மீராகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள படம் ரு. இப்படத்தை டைரக்டர் திருமலையிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்ற சதாசிவம இயக்கியுள்ளார். பி.ஆர். ஸ்ரீநார்த் இசையமைத்துள்ள இப்படத்துக்கு எல்.வி.கே. தாஸ் எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. விழாவில், வி.ஜி.பி.சந்தோசம், டைரக்டர்கள் பேரரசு, ரவி மரியா, ரமேஷ்கண்ணா மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ரு பட டைரக்டர் சதாசிவம் பேசுகையில், ரு என்றால் தமிழில் ஐந்து என்று பொருள்படும். அந்த வகையில், ஐந்து தவறான பையன்களைப்பற்றிய கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. இன்றைக்கு நாட்டில் பரவலாக நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்திதான் இப்படம் தயாராகியுள்ளது. இதே போன்ற கதையில் எத்தனையோ படங்கள் வந்து கொண்டிருந்தாலும் இப்படம் ரொம்ப புதுசாக இருக்கும். அதாவது, பாலியல் குற்றம் செய்து விட்டு ஜெயிலில் இருக்கும் ஒருவன், எதற்காக 9 மணிக்கு மேல் ஒரு பெண் வெளியில் வரவேண்டும் என்கிறான்.இன்னொருவன் பாலியல் குற்றங்களுக்கு பெண்கள்தான் காரணம் என்கிறான். அந்த அளவுக்கு தவறையும் செய்து விட்டு திமிராக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.