பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பல நூல்களை எழுதியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். அரசியல் கட்சியில் இருந்தாலும் கதை சேவையிலும் ஈடுபட மனம் வைத்து நதிகள் நனைவதில்லை என்ற படத்தை எடுத்தார். ஆனால் படம் படமாக இருந்ததா என்பதை அறிய படம் திரைக்கு வந்த பின்புதான் அவராலே அறிய முடிந்தது. படத்தில் குத்து பாட்டு நாயகி ரிஷாவை ஹீரோயினாக ஆக்கிய பெருமையை மட்டும் அன்பழகன் பெற்றுருக்கிறார். மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. நதிகள் நனைவதில்லை தலைப்புக்கு இன்றைய நிலையில் நம் நாட்டில் வறண்டு கிடக்கும் நதிகளை பற்றி எடுத்திருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். இந்த படத்துக்காக தி.நகரில் உள்ள தன் சொந்த வீட்டை விற்றுவுள்ளார். மறுபடியும் அடுத்த படம் எடுக்கவும் திட்டமிட்டுருக்கிறாராம். ஆனால் அந்த படத்தில் ரிஷா நாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.