வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
சின்னத்திரையின் கிங் மேக்கர் என்று அழைக்கப்படுகிறவர் நாளை இயக்குனர் நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கே.ஜி.ஜெயவேல். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 6 வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), நலன் குமாரசாமி (சூதுகவ்வும்), ராம் (முண்டாசுப்பட்டி), ரமேஷ் (தெகிடி) ஆகிய திறமையான இயக்குனர்களை ஜெயவேல் சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன், ரெஜினா தாமஸ், செண்ட்ராயன், ஆகிய கலைஞர்களையும், அல்போன்ஸ் புத்ரன் (எடிட்டர்), கே.ஆர்.பிரதாப் (ஒளிப்பதிவாளர்), ஜஸ்டின் பிரபாகரன் (இசை அமைப்பாளர்), விஷால் சந்திரசேகர் (இசை அமைப்பாளர்) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களையும் கண்டுபிடித்து சினிமாவுக்கு தந்தார்.
நாளை இயக்குனர் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த விழா என்ற குறும்படத்தை சினிமாவாக தயாரித்தார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. என்றாலும் தற்போது நாளை இயக்குனரில் வெற்றி பெற்ற புது இயக்குனரை வைத்த அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். விரைவில் திரைப்படக் கல்லூரி ஒன்றையும் தொடங்க இருக்கிறார்.