ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யுடிவியின் தென்மண்டல அதிகாரியாக இருக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன், ப்ளூ ஓஷன் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமியை துவக்கி உள்ளார். இதன் துவக்க விழா நேற்று (மார்ச் 4) சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இயக்குனர் மகேந்திரன், கே.பாக்யராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஒரு ஆண்டு பயிற்சி வகுப்புகளை கொண்ட இந்த அகாடமியின் வகுப்புகள் ஜூலை மாதம் முதல் துவங்குகிறது.
இதில் இயக்குனர் பயிற்சியின் துறைத் தலைவராக இயக்குனர் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திரைக்கதை அமைப்பின் துறை தலைவராக கே.பாக்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு கீழ் பார்த்திபன், ஞானராஜசேகரன், கே.ராஷேஸ்வர், சசி, வெங்கட்பிரபு, விஷணுவர்த்தன், விஜய், பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், ஆர்.எஸ்.பிரசன்னா, எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ், வரலாற்று ஆசிரியர் அறந்தை மணியன் ஆகியோர் பேராசியர்களாக பணியாற்றுகிறார்கள்.
ஒளிப்பதிவு பயிற்சி துறை தலைவராக ஒளிப்பதிவாளர் மது அம்பாட் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ், பி.கண்ணன், மகேஷ் முத்துசாமி, சி.ஜே.ராஜ்குமார் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். நடிப்பு துறை தலைவராக நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் ஷண்முகராஜன், சந்திர மோகன், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜீவா, ரோகிணி பணியாற்றுகிறார்கள். எடிட்டிங் பிரிவுக்கு பி.லெனினும், திரைப்பட இதழியல் துறைக்கு கார்டூனிஸ்ட் மதனும் துறை தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தயாரிப்பு பிரிவு துறைத் தலைவராக கோ.தனஞ்செயன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சின்னத்திரை பிரிவு தலைவராக குட்டி பத்மினி நியமிக்கப்பட்டுள்ளார்.