ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'ரொம்ப வயதாகி விட்டது; சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம்' என, காஜல் அகர்வாலை குறிவைத்து, சக நடிகைகளே, 'கமென்ட்'டுகளை பறக்க விட்டபோது, அமைதியாகவே இருந்தார் அவர். ஆனால், இப்போது, 'மாரி' உட்பட இரண்டு தமிழ் படங்களிலும், இரண்டு இந்தி
படங்களிலும், 'பிசி'யாக நடித்து வருகிறார். இதுதவிர, கடந்தாண்டு அவர் நடித்து, தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற, 'ராம்லீலா' படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளி வருகிறது.
இதனால், உச்சகட்ட சந்தோஷத்தில் உலா வருகிறது காஜல் பொண்ணு. இப்போது, அவரை சந்திக்கும்போதெல்லாம், 'எனக்கா வயதாகி விட்டது என கிண்டலடித்தீர்கள்' என, நக்கலாக
கேட்பது போல் புருவத்தை உயர்த்தி, உதட்டை குவித்து, அலட்சியமாக சிரிக்கிறாராம். அதெல்லாம் இருக்கட்டும், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை, லல்வுவதாக
கூறப்படுகிறதே... அது உண்மையா காஜல்?