சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
'த்ரிஷ்யம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தற்போது அதன் ரீமேக்காக கமலை வைத்து இயக்கிவரும் 'பாபநாசம்' படத்தை முடித்துவிட்டு மீண்டும் மலையாளத்தில் 'லைஃப் ஆப் ஜோஸுட்டி' என்ற படத்தை இயக்குகிறார் என்பது தெரிந்த செய்திதான்.. ஏற்கனவே 'மை பாஸ்' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோதே அடுத்தடுத்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள்.. அதன்பின் 'த்ரிஷ்யம்' ஹிட் மூலமாக உலக நாயகன் கமலை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாலும் கூட, ஏற்கனவே கொடுத்த வாக்குப்படி திலீப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறார் ஜீத்து ஜோசப்.
இந்தப்படத்தில் ஜோஸுட்டி என்கிற மனிதனின் முப்பது வருட வாழ்க்கையைத்தான் கதையாக மாற்றியிருக்கிறார்கள். இடுக்கி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, அங்கேயே திருமணமும் செய்துகொண்டு, பின்னாளில் நியூசிலாந்துக்கு பயணமாகும் அளவுக்கு டெவலப் ஆகிறார் திலீப். ஆனால் அங்கே வெவ்வேறு சூழலில் இன்னும் இரண்டு பெண்கள் அவரது வாழ்கையில் குறுக்கிடுகிறார்கள். அது அவரது வாழ்க்கை பயணத்தில் என்னவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. ஜோதி கிருஷ்ணா மற்றும் ரக்சனா நாராயணமூர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை..