சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அபிநயா, அனன்யா என்றதுமே இது 'நாடோடிகள்' படத்தை பற்றிய, ஏதோ ஒரு பழைய விடுபட்டுப்போன செய்தியை சொல்லப்போகிறார்களோ என நினைத்தால், அதை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். இது வேற செய்தி.. இந்த 'நாடோடி' கதாநாயகிகள் இருவரும் இணைந்து தற்போது 'தி ரிப்போர்ட்டர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்கள்.. அனன்யா இதில் ரிப்போர்ட்டராக டைட்டில் ரோலில் நடித்தாலும் அவரது கேரக்டருக்கு கதாநாயகி அந்தஸ்து இல்லையாம். அபிநயா தான் கதாநாயகியாம். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கைலாஷ்.. முக்கியமான விஷயம் இயக்குனர் சமுத்திரக்கனி இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஏன் உங்களுக்குரிய முக்கியத்துவத்தை விட்டுக்கொடுத்து நடிக்கிறீர்கள் என அனன்யாவிடம் கேட்டால், “ஐயா சாமி.. ஆளைவிடுங்கள்.. இந்த மெயின் ரோல், கேரக்டர் ரோல் என்கிற போட்டியில் எல்லாம் நான் இல்லை.. என்னை அதில் சேர்க்கவும் சேர்க்காதீர்கள்.. எனக்கு இதுதான் சரியாக இருக்கும் என இயக்குனர் முடிவு செய்து எந்த கேரக்டரை கொடுத்தாலும் அதில் நடிப்பதுதான் என் வேலை” என ஒரே போடாக போடுகிறார். அதற்கேற்ற மாதிரி முழுக்க முழுக்க துபாயில் தயாராகி இருக்கும் 'கல்யாணிசம்' என்கிற படத்தில் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக டைட்டில் ரோலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அனன்யா.. ஆக, அவரை பொறுத்தவரை சரியான ரூட்டில் தான் போய்க்கொண்டு இருக்கிறார் அனன்யா.