ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விமல்-இனியா நடித்த வாகை சூடவா படத்துக்கு இசையமைத்தவர் ஜிப்ரான். அந்த படத்தில் அவரது பாடல்கள் பேசப்பட்டதால், அடுத்தடுத்து வத்திக்குச்சி, குட்டிப்புலி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா, அமரகாவியம் என பல படங்களுக்கு இசையமைத்தார். ஆனால், முதல் படத்தின் பாடல்களுக்கு கிடைத்தது போன்று பின்னர் எந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகவில்லை. இந்த நிலையில், வாகை சூடவா படத்தில் அவரது இசை பிடித்திருந்ததால் தனது விஸ்வரூபம் -2 , உத்தமவில்லன், பாபநாசம் என மூன்று படங்களுக்கும் வரிசையாக அவரை புக் பண்ணினார் கமல். அதனால் ஒரே நேரத்தில் கமல் நடிக்கும் 3 படங்களுக்கு இசையமைக்கும் பெருமை பெற்றிருக்கிறார் ஜிப்ரான்.
அதோடு, வாகை சூடவாவிற்கு பிறகு அவர் ஹிட் கொடுக்காததால் மற்ற இயக்குனர்கள் யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் மார்ச்1-ந்தேதி ஆடியோ வெளியாகயிருக்கும் உத்தமவில்லன் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ஜிப்ரான். அதுமட்டுமின்றி, அவர் சான்ஸ் கேட்டிருக்கும் டைரக்டர்களும், உத்தமவில்லன் வரட்டும் முடிவெடுக்கலாம் என்றுதான் காத்திருக்கிறார்களாம். ஆக, உத்தமவில்லன் ஜிப்ரானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாகியிருக்கிறது.