சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பல ஆண்டுகளாகவே விஜய் டி.வியில் ஜூனியர் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களாக நடந்து வருகிறது. அதில், டீன்ஏஜ் பசங்க மட்டுமே பாடி வந்தனர். பல சுற்றில் அவர்கள் பாடுவதை பிரபல பாடகர் பாடகிகள் நீதிபதிகளாக அமர்ந்து சிறந்த ஜூனியர் சிங்கர்களை தேர்வு செய்து வந்தனர். இறுதி சுற்றுக்கு தேர்ச்சி பெறும் பாடகர்களுக்கு நேயர்களை வாக்களிக்க வைத்து அந்த அடிப்படையில் யார் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர் என்பதை தேர்வு செய்து அவர்களுக்கு வீடு, தங்கம், கார் என பரிசுகளை அளித்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை டீன்ஏஜ் பிள்ளைகளை மட்டுமே பாட வைத்து ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி இன்னும் சில மாதங்களில் சீனியர் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை நடத்தப்போகிறதாம். அதில் 50 வயதுக்கு மேற்பட்ட பாடகர் பாடகிகள் கலந்து கொள்கிறார்களாம்.
இதுவரை இளவட்ட பாடகர்களை மாவட்ட வாரியாக சென்று செலக்சன் நடத்தி போட்டியில பங்கு பெற வைத்தது போன்று அடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களை செலக்சன் செய்து போட்டி நடத்தப்போகிறார்களாம். இந்த போட்டிக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.