ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நினைத்த துறையான திரைத்துறையில் சாதித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக, நடிகர் அர்ஜூன் ராம்பால் கூறியுள்ளார்.
மாடலிங் துறையில் அறிமுகமாகி, இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அர்ஜூன் ராம்பால். பாசிட்டிவ் ரோல்களை மட்டும் செய்யாமல், நெகட்டிவ் கேரக்டர்களிலும் தனது முத்திரையை பதித்தவர். ஆக்ஷன் , காமெடி படங்கள் என்று எல்லா கேரக்டர்களிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவர் என்று அர்ஜூன் ராம்பாலை சொல்லிக்கொண்டே போகலாம். அத்தகைய பன்முக திறமை கொண்ட அர்ஜூன் ராம்பால், தற்போது, விரைவில் வெளிவர உள்ள ராய் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதில் பிசியாக இருந்த நிலையிலும், ராய் படத்தில் தனது கேரக்டர், தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்....
ராய் படத்தில் எந்த மாதிரியான கேரக்டர்?
ராய் படத்தில், கபீர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கபீர், சிறந்த டைரக்டர். பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர். அவர் எடுத்த வெற்றிப்படங்களில், கன் படமும் ஒன்று, கன் படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான கன்-2 எடுக்கிறார். அதுவும் சூப்பர்ஹிட் ஆகிறது. கன் - 3 படத்தை எடுக்க திட்டமிடுகிறார். கன் -3 படம் எடுக்க தேவையான பணம், கையில் உள்ளபோதிலும், படத்திற்கு கதை கிடைக்கவில்லை, கதையை தேடும் கேரக்டரில், நான் இப்படத்தில் நடித்துள்ளேன்.
ஜாக்குலினுக்கு என்ன மாதிரியான கேரக்டர்?
ராய் படத்தில், ஜாக்குலின் பெர்னான்டஸ், படத்தயாரிப்பாளர் கேரக்டரில் நடிக்கிறார். தயாரிப்பாளர் என்றால் சாதாரண தயாரிப்பாளர் இல்லை. அவரின் தயாரிப்பில் உருவாகும் படங்கள், பெரும்பாலானவை, திரைப்பட விழாக்களில் பங்கேற்கும். அந்தளவிற்கு வெற்றிகரமான தயாரிப்பாளர். ஒருநாள் சூட்டிங்கின் போது, கபீர் (அர்ஜூன் ராம்பால்), ஜாக்குலின் பெர்னான்டசை சந்தி்க்கிறார். அவரின் கேரக்டரை கூர்ந்து கவனிக்கும் கபீர், அந்த சந்திப்பிலிருந்து கன்-3 படத்திற்கான கதையை தேர்ந்தெடுக்கிறார்.
தொப்பியும் இந்த படத்தில் நடித்துள்ளது...
நான் இந்த படத்தில் டைரக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை பற்றி சிந்திக்கும்போதெல்லாம், நான் ஒரு தொப்பி அணிந்திருப்பேன். அந்த தொப்பிக்கு, நான் சிந்திக்கும் தொப்பி என்று பெயர் வைத்துள்ளேன். நான் நடைமுறை வாழ்க்கையிலேயே, ஏதாவது எழுதும்போதோ, அல்லது படிக்கும்போதோ, தொப்பி அணிந்து கொண்டு தான் இருப்பேன். என் பழக்கத்தையே, ராய் படத்தின் டைரக்டரும் இங்கு பயன்படுத்தியுள்ளார்.
ராய் எந்த மாதிரியான படம்?
ராய், மிகவும் எமோஷனலான படம். இந்த படத்தில், சில சஸ்பென்ஸ்களும் உள்ளன. மக்களுக்கு இது புதுவிதமான படமாக இருக்கும். இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களை, வேறு எந்த படங்களிலும் பார்த்திருக்க முடியாது. படத்தின் கிளைமாக்ஸ், பார்ப்பவர்களை கவர்வதோடு மட்டுமல்லாது, அவர்களோடு ஒன்றியிருக்கும் வகையில் இருக்கும்.
படத்தின் வசூல் எப்படி இருக்கும்?
ராய் படம், 80 மில்லியன் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கிறோம்...அதுவே எங்களுக்கு போதுமானது தான்.
உங்கள் பேவரைட் படம் எது?
சந்தேகமே இல்லாமல், எனது பேவரைட் படம் ராய் தான். இருந்தபோதிலும், ஓம் சாந்தி ஓம் படம் எனது முதல் பேவரைட் படம் தான். அந்த படத்தில், எனது கேரக்டர் மிகவும் சவாலானது ஆகும். அந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு 30 வயது. ஆனால், படத்தில் நான் 60 வயது முதியவர் கேரக்டரில் நடித்திருந்தேன். நான் தற்போது இந்த புகழின் உச்சியில் இருக்கிறேன் என்றால், அதற்கு ஓம் சாந்தி ஓம் போன்ற படங்களே முக்கியமானது ஆகும்.
கடின உழைப்பே எனது வலிமை
என்னிடம் பலர், உங்களது வலிமை என்று கேட்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம், அவர்களது வலிமையாக இருக்கும், எனது வலிமையாக நான் கருதுவது, எனது கடின உழைப்பே ஆகும். நான் ஒன்றை செய்ய முடிவு எடுத்துவிட்டால், எப்பாடு பட்டாவது அதை முடித்துவிடும் ஆற்றலை, கடவுள் எனக்கு தந்திருக்கிறார். முதல் அடி எடுத்துவைத்தபின், அதிலிருந்து ஒருபோதும் நான் பின்வாங்கியதில்லை. எத்தகைய செயலை செய்தாலும், அதில் எனது முழு ஈடுபாட்டை செலுத்துகிறேன். அதுதான் எனது வெற்றிக்கும் முழுமுதற்காரணம். நான் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். கடின உழைப்பை மூலதனமாக கொண்டு இங்கு தொடர்ந்து முயற்சி செய்ததால், நினைத்த துறையில் நான் தற்போது சாதித்து விட்டேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று அர்ஜூன் ராம்பால் கூறினார்.