அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சினிமாவில் இத்தனை வருடங்களில் நான் சேர்த்த மிகப்பெரிய சொத்து ரசிகர்களாகிய நீங்கள் தான் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த கத்த படம் கடந்த தீபாவளியன்று வௌியானது. கடந்தாண்டு வௌியான படங்களில் ரூ.100 கோடி வசூலை தொட்ட படம் விஜய்யின் கத்தி. இப்படம் ரூ.100 கோடியை வசூலித்ததோடு மட்டுமில்லாமல் 100 நாட்களையும் கடந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் கத்தின படத்தின் 100 நாட்கள் வெற்றியை பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய் இப்போது வாய் திறந்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, கத்தி படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக ஆக்கியதற்கு ரசிகர்களுக்கு நன்றி. ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புக்கு வெறும் நன்றி என்று ஒருவார்த்தையில் கூறிவிட முடியாது. இத்தனை வருடங்களில் நான் சேர்த்த மிகப்பெரிய சொத்து ரசிகர்களாகிய நீங்களும், உங்களது அன்பும் தான் என்று கூறியுள்ளார் விஜய்.