ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இருதினங்களுக்கு முன்னர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத், இன்று(ஜன.30ம் தேதி) பாலாக்காட்டில் உள்ள கோயிலுக்கு சென்று வந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவர் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் அடுத்தவாரம் வௌிவர உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக அஜீத், தனது படம் முடிந்தவுடன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி வீரம் படம் முடிந்தபோது ரிலீஸ்க்கு முன்னர், அப்படத்தின் இயக்குநர் சிவா உடன் திருப்பதிக்கு சென்று முடி காணிக்கை செலுத்தினார்.
அதேப்போல் இந்தமுறை ''என்னை அறிந்தால்'' படம் அடுத்தவாரம் வௌிவர உள்ள நிலையில், இருதினங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு திரும்பினார். வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜித்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரசிகர்கள் சிலரும் அவரை சந்தித்தனர்.
இந்நிலையில் இன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளார் அஜீத். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அஜீத் சாமி தரிசனம் முடித்த பின்னர் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது.