ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது தென்னிந்திய படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறது. கோச்சடையான் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரியான ஈராஸ் நிறுவனம், தொடர்ந்து கத்தி, லிங்கா, டார்லிங், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களின் ஆடியோ ரைட்ஸையும் வாங்கி வெளியிட்டது. இதுதவிர ரஜினியின், கோச்சடையான், லிங்கா உள்ளிட்ட சில படங்களையும் வாங்கி வௌியிட்டது.
இந்த நிறுவனங்கள் வௌியிடும் படங்களின் பிரஸ்மீட்டில், சம்பந்தப்பட்ட பெரிய நடிகர்கள் யாரும் பங்கேற்பது கிடையாது. அப்படியே பத்திரிகைகளுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் பேட்டியளித்தால் அது ஆங்கில பத்திரிகையாகத்தான் இருக்கும். தமிழ் பத்திரிகையாளர்கள், படக்குழுவிடம் பேட்டி கேட்டால் அவர்களை புறக்கணித்து விடுகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையருக்கு இந்த ஆங்கில நாளிதழுக்கு, இந்த டிவிக்களுக்கு மட்டும் பேட்டி கொடுங்கள் என்று முன்கூட்டியே சொல்லி அனுப்பி விடுகிறது ஈராஸ். அவர்களும் அப்படியே செய்கின்றனர். இதுபோன்ற நிகழ்வு கோச்சடையான் முதல் இப்போது வௌியாக இருக்கும் ஷமிதாப் வரை தொடர்கிறது. இதனால் தமிழ் மீடியாக்கள் ஈராஸ் மீது கோபத்தில் இருக்கின்றனர்.