ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
முன்னணி சேனலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடரை சினிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடர் தற்போது 100 வது எபிசோடை தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பல புதுமைகளை அதில் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதுபற்றி தொடரின் இயக்குனர் சி.வி.சசிகுமார் கூறியதாவது: எங்கள் தொடரில் மகாபாரத கதை மைய இழையாக இருந்தபோதும் அது தொடர்பாக இதுவரை பலரும் அறிந்திராத பல புதுமையான, சுவையான சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறோம். இதற்காக தமிழில் கம்பராமாயணம் போல் தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி, குஜராத்தி, பெங்காலி, ராஜஸ்தானி, இந்தோனேஷிய மொழிகளில் வெளிவந்திருக்கும் மகாபாரத நூல்களை படித்து நமக்குத் தெரியாத பல சம்பங்களை அறிந்து அதனை மகாபாரதத்தின் இடையில் சேர்க்கிறோம்.
இதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்ய இருக்கிறோம். அது தமிழ்நாட்டின் தொன்மை கலைகளான பொய்கால் குதிரை, நடன கதைகள், கிராமிய கூத்து, பஞ்சராத்ர தூது வாத்யம், போன்ற கலைகளை பொருத்தமான இடங்களில் சேர்க்க இருக்கிறோம். இது ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்.
இதுதவிர தொடருக்காக பெங்களூரில் 1 கோடி ரூபாய் செலவில் அரண்மனை செட் போட்டிருக்கிறோம். தமிழ் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் செட் போட்டிருப்பது இதுவே முதல் முறை. என்றார் இயக்குனர் சி.வி.சசிகுமார்.