ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ஐ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான அதே நாளில் ஆந்திராவிலும், கேரளாவிலும் வெளியானது. அனைத்து ஏரியாக்களிலும் ஐ படத்துக்கு அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றாலும், தமிழ்நாடு ஆந்திராவைவிட கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கடந்த 14-ஆம் தேதி கேரளா முழுக்க வெளியான ஐ படம் இன்று வரை ஹவுஸ்புல்தான்! திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஐ படம் வெளியான அன்று பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் பணியில் தியேட்டர் காவலாளி ஸ்ரீகுமார் என்பவர் ஈடுபட்டிருந்தபோது, நெரிசலில் சிக்கி கீழே விழுந்திருக்கிறார். கூட்டம் அவரை மிதித்ததில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது மொத்த உடம்பே செயலிழந்துபோய்விட்டதாம். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் சுரேஷ் கோபி காவலாளி ஸ்ரீகுமாருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். அதோடு, இந்த தகவலை படத்தின் ஹீரோ விக்ரம், மற்றும் இயக்குநர் ஷங்கருக்கும் தெரிவித்த சுரேஷ் கோபி, அவர்களையும் ஸ்ரீகுமாருக்கு உதவி செய்யும்படி வற்புறுத்தி இருக்கிறார். சுரேஷ்கோபியின் பேச்சை தட்டமுடியாமல், நிச்சயம் உதவி செய்வதாக கூறியிருக்கிறார்களாம் ஷங்கரும், விக்ரமும்.