ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
ஹிட் படத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறேனே தவிர, மற்ற படங்களில் அல்ல...என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாது, குறுகிய காலத்திலேயே, பாலிவுட்டிலும் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் தனுஷ். ஷமிதாப் படத்தின் புரோமோஷன் பணிகளில், தனுஷ் பிசியாக உள்ள நேரத்தில், ஷமிதாப் படத்தில் நடித்த அனுபவம் மற்றும் பாலிவுட் சினிமா குறித்த கருத்துகளை நம்மிடம் அவர் பகிர்ந்துகொள்கிறார்.
ஷமிதாப் படம் பற்றி...
உண்மையிலேயே, ஷமிதாப் படம் புத்தம் புது படம். புது விதமான கதை மட்டுமல்லாது புது கான்செப்டில் படம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு படத்தை பற்றியும் அதில் நடித்துள்ள நடிகர்கள், புத்தம் புது படம் என்று வழக்கமாக சொல்வார்கள். ஆனால், ஷமிதாப் படத்தை பொறுத்தவரை, அப்படி கூறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. ஆனால், படத்தின் திரைக்கதை, இதுவரை யாருமே சொல்லாத திரைக்கதை. இந்த படம், படம் பார்ப்பவர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும். அவர்கள், இதற்குமுன், இப்படியொரு படத்தை பார்த்திருக்க மாட்டார்கள்.
படத்தின் டைட்டில் குறித்து..
படத்தின் டைட்டில் குறித்து நான் எதுவும் கூறவில்லை. படத்தின் கதைக்கு ஏற்ப தான், டைட்டிலை, டைரக்டர் பால்கி தேர்வு செய்துள்ளார். ஷமிதாப் என்பதில், அமிதாப் பச்சன் மற்றும் தனுஷின் பெயர் இடம்பெற்றிருப்பதாக நான் நினைக்கவில்லை. எனக்கு பதிலாக மற்ற நடிகர்கள் யாராவது நடித்திருந்தால் கூட, இந்த டைட்டிலே இடம்பெற்றிருக்கும் என்று நினைக்கிறேன்.
அக்ஷராவுடன் இணைந்து நடித்தது...
அக்ஷரா, குழந்தை போன்று இருக்கிறார். ஆம். இது அவருக்கு முதல் படம். ஷமிதாப் படத்தின் மூலம், பாலிவுட்டுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த திரையுலகிற்கு முதன்முதலாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில், அக்ஷரா, பத்திரிகையாளர் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் அவரது கேரக்டர் பெரிதாக இல்லை என்றாலும், ஆனால், மிகவும் கடினமாக கேரக்டர். முதல் படமாக இருந்தாலும், நன்றாக தேர்ந்த நடிகை போன்று, படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் தனது நடிப்பால், அக்ஷரா மிளிர்ந்துள்ளார். அவரது திரை வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்க எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தது குறித்து..
பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்ததை, எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனையாகவே கருதுகிறேன். இந்த படத்தில், அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க உள்ளேன் என்ற தகவலை கேட்டதுமே, முதலில் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரின் பின்னால் இருந்து, அவரின் ஒவ்வொரு அசைவுகளையும், கவனமாக உற்றுநோக்கினேன். அவரிடமிருந்து கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் தான் நடிக்கும் எல்லா படத்தையும், தனது முதல் படம் போன்றே பாவிப்பது தான். அவரின் அந்த மனோபாவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், தனது முழு திறமையை அதில் காட்டி, காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதுதான், அவர் இத்துறையி்ல், முன்னணியில் நீடிப்பதற்கு காரணம்.
உங்களை லிட்டில் ரஜினிகாந்த் என்றழைக்கலாமா?
என்னை லிட்டில் ரஜினிகாந்த் என்று தாங்கள் என்னை அழைத்தால், அதனை மிகப்பெரும் பாக்கியமாக கருதுவேன். ரஜினி சார் நடித்த படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். ரஜினி சார் நடித்த பாட்ஷா படத்தின் முதல் நாள், முதல் ஷோவை பார்க்க, 7 மணிநேரம் கால்கடுக்க நின்றது இப்போதும் நினைவு இருக்கிறது. நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவரின் படங்களை பார்த்து நான் வளர்ந்ததினால், அவரின் நல்ல குணாதிசயங்கள் எனக்கும் வந்துள்ளது.
சிக்ஸ் பேக், எயிட் பேக் இல்லாமலேயே, பாலிவுட்டில் பிரபலமாகியிருக்கீங்களே? இது எப்படி சாத்தியமாயிற்று?
இதற்கு, படத்தின் டைரக்டருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்ள வேண்டும். நல்ல, தெளிவான கதை இல்லையென்றால், எந்தவொரு நடிகனும் வெற்றி பெற முடியாது. கதையை திறம்பட இயக்குவதில், இயக்குநருக்கு தான் முக்கிய பங்கு. சிக்ஸ் பேக் மற்றும் எயிட் பேக் உடற்கட்டு இல்லாமல் இருந்தால் தான், நான் திரையில் நன்றாக இருப்பேன். நான் இத்துறையில் வெற்றி பெற்றதற்கு நல்ல கதைகள் அமைந்தது தான் காரணம். ராஞ்ஜனா படத்தில் எனது கேரக்டர் பேசப்பட்டதற்கு காரணம், படத்தின் கதை தானே தவிர, நான் அல்ல.
தமிழில் முன்னணி நடிகராக உள்ள நீங்கள், பாலிவுட்டில் எத்தகைய இடத்தை பிடிக்க உள்ளீர்கள்?
பாலிவுட்டில் எந்தவொரு இடத்தையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நான் இல்லை.
பாலிவுட் மட்டுமல்லாது, தமிழிலும் அப்படி நான் நினைத்தில்லை. நினைப்பதும் இல்லை. ராஞ்ஜனா படத்தின் வெற்றிக்கு பிறகு, பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு என்னை தேடி வந்தது. நான் அதில், ஷமிதாப் கதையை தான் தேர்வு செய்தேன். ஏனென்றால், நான் ஹிட் படத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறேனே தவிர, மற்ற படங்களில் அல்ல...ஷமிதாப் படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. நல்ல கதையை தேர்ந்தெடுத்த நான், இயக்குநர் பால்கி சொல்லிக்கொடுத்தது போன்று நடித்துள்ளேன். படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தை பார்த்தபிறகு, பார்வையாளர்கள், எனது கேரக்டர் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் தெரிந்துகொண்ட பிறகுதான், நான் மேலும் எத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை தீ்ர்மானிக்க முடியும்.
தென்னிந்திய திரைப்படங்களுக்கும், பாலிவுட் படங்களுக்கும் உள்ள வேறுபாடு?
தென்னிந்திய திரைப்படங்களுக்கும், பாலிவுட் படங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக நான் உணரவில்லை. ஒரே ஒரு வேறுபாட்டை நான் கண்கூடாக கண்டுள்ளேன். அதுயாதெனில், பாலிவுட் படங்களில் வசனங்கள் ஹி்ந்தியிலும், தமிழ் படத்தில் வசனங்கள் தமிழிலும் இருக்கும் அவ்வளவு தான். கதையை மட்டு்மே, நான் எப்போதும் பிரதானமாக எடுத்துக்கொள்வேன்.மற்றபடி, கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் வேறுபாடுகள் எனக்கு தெரியவில்லை என்று தனுஷ் கூறினார்.