ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராவுத்தர் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்துள்ள புலன் விசாரணை 2 படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கி உள்ளார், பிரசாந்த், கார்த்திகா நடித்துள்ளனர். நீண்டநாள் கிடப்பில் இருந்த படத்தை தற்போது வருகிற 29ந் தேதி வெளியிட முயற்சித்து வருகிறார் இப்ராஹிம் ராவுத்தர்.
இதற்கிடையில் புலன் விசாரணை படத்தை திருட்டு விசிடி தயாரித்து விற்க சிலர் முயற்சித்து வருவதாக இப்ராஹிம் ராவுத்தரும், ஆர்.கே.செல்வமணியும் போலீஸ் கமிஷனரைச் சந்தித்து புகார் கொடுத்தனர். இப்போது திருட்டு விசிடி வெளிவருவதை தடுக்க சில ரகசிய தொழில்நுட்ப விஷங்களை படத்தின் பிரிண்டில் வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரும் கூறியதாவது: புலன் விசாரணை 2 வை வருகிற 29ந் தேதி தமிழ்நாட்டில் மட்டும் 250 தியேட்டர்களில் வெளியிடுகிறோம். திருட்டு விசிடியை தடுப்பதற்காக வெளிநாட்டு உரிமமோ டி.வி.டி உரிமமோ, டி.வி. உரிமமோ கொடுக்க வில்லை. 250 பிரிண்டிலும் ரகசிய டெக்னிக் விஷயம் ஒன்றை வைத்திருக்கிறோம்.
இப்போது தியேட்டரில் திருட்டு விசிடி எடுப்பவர்கள். ஆடியோவை ஒரு தியேட்டரிலும், வீடியோவை ஒரு தியேட்டரிலும் பதிவு செய்கிறார்கள். இதனால் வீடியோ பதிவு செய்வதை தடுக்க ஷேடோ மார்க்கிங் வைத்திருக்கிறோம். ஆடியோ பதிவை தடுக்க சைலண்ட் மார்க்கிங் வைத்திருக்கிறோம். பதிவு செய்யும்போது அருகில் உள்ள செல்பொன் டவரின் விபரங்கள் பதிவாகிவிடும். அதை வைத்து எங்கு காப்பி எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து விட முடியும். இதைக் போலீசிடம் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியும்.
இந்த புதிய தொழில்நுட்பத்தை புலன் விசாரணையில் துவங்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் இதை பின்பற்றலாம். இதற்கு தனி செலவோ, கட்டணமோ கிடையாது. என்றார்.