ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் சரண் இயக்கியிருக்கும் ஆயிரத்தில் இருவர் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி ஓரிரு வாரங்களில் நிகழவிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. கடந்த மாதம், படத்திற்கு ஒரு டூயட் பாடல் தேவைப்பட்டிருக்கிறது. காதலிக்க தயங்கும் ஆணும் அந்தத் தயக்கத்தைப் போக்க முயற்சி செய்யும் துணிச்சலான பெண்ணும் பாடுவதுதான் சூழல். சரண் தன் படங்களுக்கு வைரமுத்துவைத் தவிர வேறு பாடலாசிரியரைப் பயன்படுத்தியதில்லை. முதல் முறையாக அடுத்தத் தலைமுறைக்கு போகலாம் என்று கபிலன் வைரமுத்துவை எழுத சொல்லியிருக்கிறார். பரத்வாஜ் ட்யூன் கொடுத்த ஒரே நாளில் எழுதி அனுப்பியிருக்கிறார் கபிலன். பாடலைப் பார்த்த சரணுக்கு ஷாக்கோ ஷாக். அவர் சொன்ன அதே சிச்சுவேஷனில் காதலனும் காதலியும் உரையாடுவது போல் எழுதியிருந்த கபிலன் பாடலின் இரண்டு சரணங்களிலும் சரண் இயக்கிய முந்தைய படங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அந்த உரையாடலை அமைத்திருந்தார். காதல் மன்னனாக நான் நெருங்கிவரும் நொடியில் பாதரச பார்வ பட்டு பரிதவிப்பேனே என்று ஆண் தன் தயக்கம் சொல்ல அதற்கு கண்கள் ரெண்ட மூடி ஒரு காம வேர்வை மூட்டி அமர்க்களமாய் அணைத்துக்கொண்டால் அவிழ்ந்திடுவேனே என்று பெண் பதில் சொல்ல இப்படி காதல் மன்னன் அமர்க்களத்தில் தொடங்கி ஜெமினி, அட்டகாசம், அசல், ஜே ஜே என்று இயக்குனர் சரண் கடந்துவந்த பாதையை ஒரு காதல் பாடலுக்குள் பதிவு செய்துவிட்டார் கபிலன்வைரமுத்து. ”ஃபாரின் போற மாதிரி சாங் எழுதுவார்னு பாத்தா எல்லாரையும் ஃப்ளேஷ்பேக் போக வச்சுட்டாரு” என்று சரண் வட்டாரத்தில் செம கலகலப்பு.