ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செலிபிரிட்டிக்களின் உடல்நிலை குறித்து மீடியாக்கள் செய்தி வெளியிடும்போது, அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும் என்று பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இதுகுறித்து அமிதாப் பச்சன் கூறியதாவது, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, நிருபர்களே, டாக்டர் வேடம் அணிந்து எல்லாம் என்னை சந்தித்து, என் உடல்நிலை குறித்து தெரிந்துகொண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். அந்த நேரத்தில், நான் நலமாக இருக்கும் பட்சத்தில், எந்தவொரு பிரச்னையுமில்லை. அதற்கு மாறாக, அந்த நேரத்தில், நான் தங்களுடன் பேச முடியவில்லையென்றால், தாங்கள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே, கற்பனைக்குதிரைகளை தட்டிவிட்டு விடுகிறீர்கள். இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, செலிபிரிட்டிகளின் உடல்நிலை குறித்து மீடியாக்கள் செய்தி வெளியிடும்போது, அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும் என்பதை, மீடியா நண்பர்களுக்கு தனது வேண்டுகோளாக வைப்பதாக அமிதாப் கூறியுள்ளார்.