ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் மட்டுமே பிரபலமாக இருந்த தனுஷ், கொலவெறி.... எனும் ஒரே பாடல் மூலம் உலகபுகழ் பெற்றார். இப்படி தன் சினிமா கேரியரை மாற்றி அமைத்த அந்த கொலவெறி பாடல் தனுஷூக்கு பிடிக்காதாம். அதைக்கேட்டாலே வெறுப்படைகிறாராம். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது, கொலவெறி பாடல் உருவானது ஒரு விபத்து தான். ஆனால் அது இந்தளவுக்கு புகழ் பெறும் என்று நினைக்கவில்லை. என் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் உள்ளது என்றார். ஆனால் இந்தப்பாட்டை நான் கேட்கவே மாட்டேன், என்னுடைய ஐ-பாட், ஐ-பேட், செல்போன், கம்யூட்டர் உள்ளிட்ட அத்தனை சாதனங்களிலும் இந்தப்பாட்டை அழித்துவிட்டேன். இந்தப்பாட்டை கெட்டால் சலிப்பு தான் வருகிறது என்று வெறுப்பாக கூறுகிறார் தனுஷ்.
தனுஷ், பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன் உடன் ''ஷமிதாப்'' எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி முதல்வாரத்தில் ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படம் தொடர்பான புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் தனுஷ்.