ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை சோனாக்ஷி சின்ஹாவுடன் ஒப்பிடுகையில் நான் சுள்ளான் தான் என்று நடிகர் அர்ஜூன் கபூர் கூறியுள்ளார்.
இஷாக்ஜாதே படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தீவார் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ள நடிகர் அர்ஜூன் கபூர், தீவார் படத்தில் தன்னுடைய அனுபவங்கள் மற்றும் தனது எதிர்கால படவாய்ப்புகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்
தீவார் படம் எந்த மாதிரியான படம்?
தீவார் படம் மசாலா படமோ...ஆக்ஷன் படமோ இல்லை. இது முழுமையான பொழுதுபோக்கு படம். இந்த படத்தில், காதல், ரொமான்ஸ், ஆக்ஷன், பாடல்கள் என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தீவார் படத்தை அமித் சர்மா இயக்கியுள்ளார். தபாங் எவ்வாறு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருந்ததோ, அதைப் போன்றே, இந்த படமும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். பொழுதுபோக்கு படங்கள் எப்போதும் சோடை போகாது...
படத்தில் என்ன மாதிரியான வேடம்?
தீவார் படத்தில், நான் கபடி வீரர் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பின்டு சுக்லா. ஆக்ராவாசியாக இந்த படத்தில் வருகிறேன். 24 வயதான இளைஞன், தான் நினைத்ததே, எத்தகைய தடைகளை சந்தித்தாலும், செய்து முடிக்கும் தீரன். படத்தில் எனக்கென்று ஒரு சிறப்பு பாடல் இருக்கிறது.
கஷ்டத்தில் உள்ள பெண்ணுக்கு உதவும் வேடம்
தீவார் என்றால் ஒருவருடைய நடத்தை என்று பொருள். துன்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு உதவும் கேரக்டரில், நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இதனால், நானும் பிரச்னையை சந்திக்கிறேன். அந்த பெண்ணும், என்னுடன் வந்து தஞ்சம் அடைகிறாள். அதன்பிறகு ஏற்படும் விளைவுகளை, நான் எவ்வாறு சந்தித்து வெற்றி பெறுகிறேன், இதற்கிடையில் அந்த பெண்ணுக்கும், எனக்கும் இடையே காதல் பூக்கிறது. 2003ம் ஆண்டு குணசேகரன் இயக்கத்தில், மகேஷ்பாபு, பூமிகா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "ஒக்கடு" படத்தின் ரீமேக்கே, இந்த தீவார் படம் ஆகும்.
கபடி கற்றுக்கொண்டேன்
படத்தில் நான் கபடி வீரர் வேடத்தில் நடித்துள்ளதால், கபடி விளையாட்டு குறித்து முழுவதும் கற்று தெரிந்துகொண்டேன். என்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் கேரக்டருக்காக, எனது முழு உழைப்பை வெளிப்படுத்தியுள்ளேன். நடிப்பில் எனக்கு சுணக்கம் ஏற்படும் போதெல்லாம், டைரக்டர் அமித் சர்மா எனக்கு ஊக்கம் தந்து சிறப்பாக நடிப்பதற்கு உறுதுணை புரிந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, ஒக்கடு படத்தை பார்த்து, படத்திற்காக, என்னை நான் அதற்கேற்றவாறு மாற்றிக்கொண்டேன்.
உண்மையான ஸ்டார் சல்மான் தான்
பாலிவுட்டில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும், நான் உண்மையான நட்சத்திரமாக நினைப்பது சல்மான் கானை தான். இன்று நான் ஹீரோவாக உங்கள் முன் நிற்கிறேன் என்றால், அதற்கு காரணம் சல்மான் கான் தான். சல்மான் கானின் அனுமதியுடன், தீவார் படத்தில், "மெயின் சூப்பர்மேன், சல்மான் கா பேன்" என்ற பாடலை வைத்துள்ளோம். பாடல் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்களை இந்த பாடல் நிச்சயமாக கவரும்.
சோனாக்ஷி சரியான தேர்வு
பாலிவுட் திரையுலகின் சிறந்த மற்றும் முன்னணி நடிகையாக சோனாக்ஷி சின்ஹா உள்ளார். தீவார் படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு சோனாக்ஷி சின்ஹா சரியான தேர்வு ஆகும். சோனாக்ஷி சின்ஹா என்பது என் தேர்வு மட்டுமல்லாது, எனது தந்தையின் தேர்வும் தான். ஹீரோயினுக்கு டிப்பிகல் இந்திய பெண் வேடம். சோனாக்ஷி்க்கு இந்த தகுதிகள் அனைத்தும் இருந்ததால், அவரையே தேர்வு செய்தோம். அந்த வேடத்தில், சோனாக்ஷியை தவிர மற்ற யாரையும் நினைத்துப்பார்க்க எங்களுக்கு மனம் இடம்தரவில்லை.
சோனாக்ஷியுடன் நடித்தது மகிழ்ச்சி
இந்த படத்தின் மூலம், சோனாக்ஷி சின்ஹாவுடன் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளேன். சோனாக்ஷியும், நானும் ஒரே ஸ்கூலில் படித்தோம். அவர் எனக்கு முன்னதாகவே, திரைத்துறைக்கு வந்து நிறைய சாதித்துவிட்டார். நான் இப்போதுதான் காலடியே எடுத்துவைத்துள்ளேன். தன்னுடைய திறமையினால், சோனாக்ஷி, முன்னணி இடத்தில் உள்ளார். சோனாக்ஷியுடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சோனாக்ஷியுடன் ஒப்பிடுகையில், நான் சுள்ளான் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அவர் நடிகையாகவே பிறந்து , தற்போது மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் என்று அர்ஜூன் கபூர் கூறினார்.