ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்து வெளியிட்டவர் சசிகுமார். அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் நடிகர்-டைரக்டர் என்ற இரண்டு முகங்களுடன் கோலிவுட்டில் இடம்பிடித்துள்ள அவர், தற்போது பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பல மாதங்களுக்கு முன்பே அப்படத்திற்காக கரகாட்ட பயிற்சி எடுத்த சசிகுமார், சமீபத்தில்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
அதனால் தாரைதப்பட்டை படப்பிடிப்பு எப்போது முடியுமோ அதன்பிறகுதான் அவர் வேறு படஙகளில் நடிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் தமிழில் எந்த டைரக்டரிடமும் அவர் அடுத்த படத்திற்கான கதை கேட்கவில்லை. இதற்கிடையே, விஜய்யைக்கொண்டு அட்லி படம் இயககி முடித்ததும் அதற்கடுத்து விஜய் நடிக்கும் படத்தை சசிகுமார் இயக்கயிருப்பதாகவும் செய்தி பரவியுள்ளது. இந்தநிலையில், தற்போது ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்கு சசிகுமார் ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த படம் அவர் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் இந்தி ரீமேக்தானாம். தமிழில் வெளியான அப்படம், பின்னர், தெலுங்கு கனனடத்தில் வெளியானது. அதையடுதது இந்தியில் தானே இயக்க முடிவு செய்திருந்தார் சசிகுமார். ஆனால் என்ன காரணமோ இப்போது இந்தி உரிமையை வேறு நபருக்கு கொடுத்து விடடார். அப்படத்தில் நாயகனாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவு- செய்யப்படவில்லை என்றாலும், சசிகுமார் ஒரு வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறதாம். அது எந்த வேடம் என்பதும் சஸ்பென்சாக உள்ளது.