ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள பாம்பே வெல்வெட் படம், இந்தாண்டின் நவம்பர் மாதத்திலேயே வெளியாக இருந்த நிலையில், தற்போது வெளியீடு, 2015ம் ஆண்டு மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது இயக்குநருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், படம் குறித்து அவர் மகிழ்ச்சியாக உள்ளார் என்றே கூற வேணடும். இதுதொடர்பாக, இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாவது, பாம்பே வெல்வெட் படத்தின் கதையை, சயீப் அலி கானை மனதில் வைத்து தான் உருவாக்கினேன். இந்த படத்தை, ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதாக இருந்தது. ஆனால், இறுதிநேரத்தில், சயீப் அலி கான் இப்படத்தில் நடிக்க முடியாததையடுத்து, அமீர் கானிடமும் மற்றும் ஹிருத்திக் ரோஷனிடம் இந்த கதையை கூறினேன். அவர்களாலும், இப்படத்தில் நடிக்க முடியவில்லை. தற்போது, ரன்பீர் கபூரின் நடிப்பில், இப்படத்தை முடித்துள்ளேன். ரூ. 300 கோடி பட்ஜெட்டிலான படத்தை, ரூ. 90 கோடியிலேயே படமாக்கி உள்ளோம்.் படமும் சிறப்பாக வந்துள்ளதாக அவர் கூறினார்.