ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இரவு முழுக்க குடித்துவிட்டு காலையில் குளிக்காமல் கூட சில ஹீரோக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகிறார்கள், அவர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது குமட்டல் வருகிறது என்று கூறியுள்ளார் நடிகை கத்ரீனா கைப். பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனாவிடம் பாலிவுட் ஹீரோக்களை பற்றி கேட்க, தனது மனகுமுறல்களை எல்லாம் கொட்டி தீர்த்து பாலிவுட் ஹீரோக்களை நாறடித்துவிட்டார்.
அப்படி என்ன சொன்னார்....?
கத்ரீனா கூறியதாவது, பாலிவுட்டில் ஹீரோக்கள் ரொம்ப மோசமானவர்கள், சுத்தமற்றவர்கள். இரவெல்லாம் குடித்துவிட்டு காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு குளிக்காமல் கூட கிளம்பி வந்துவிடுகிறார்கள். அவர்கள் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது ரொம்ப சிரமப்படுகிறேன். சில சமயங்களில் அந்த நாற்றத்தால் வாந்தி கூட வந்துவிடுகிறது. நான் எந்தளவுக்கு கஷ்டப்படுகிறேன் என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
அதேசமயம் தென்னிந்திய ஹீரோக்கள் சூப்பரானவர்கள். ஹீரோயின்களை மதிக்க தெரிந்தவர்கள். பாலிவுட் ஹீரோக்கள், தென்னிந்திய ஹீரோக்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.