ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்கா பட விஷயத்தில், கட்டுப்பாட்டை மீறி, தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள் பிரச்னை செய்து வருகின்றனர். அதனால், முன்னணி நடிகர்கள் நடித்த புதிய படங்களை வெளியிட தயாராகும், தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.ரஜினிகாந்த் நடித்துள்ள, லிங்கா படம், தமிழகம் முழுவதும், வேந்தர் மூவீஸ் சார்பில், 600 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளன. வேந்தர் மூவீஸ் நிறுவனத்திடம் இருந்து, வினியோகஸ்தர்கள் சிலர் படத்தை வாங்கி, சில ஏரியாக்களில் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், மூன்று நாட்களுக்கு பின், எதிர்பார்த்த கலெக்ஷன் இல்லை;
வினியோகஸ்தர்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கடந்த, 17ம் தேதி தகவல் வெளியானது.
65 தியேட்டர்களில்...வேந்தர் மூவீஸ் நிறுவனத்திடம் இருந்து, செங்கல்பட்டு ஏரியா வெளியீட்டு உரிமையை, சென்னை, தி.நகரைச் சேர்ந்த வினியோகஸ்தர் ஒருவர், 14 கோடி ரூபாய்க்கு வாங்கி, 65 தியேட்டர்களில் திரையிட்டுள்ளார். ஆனால், மூன்று நாட்களுக்கு பின், எதிர்பார்த்தகலெக் ஷன் ஆகவில்லை.படத்திற்கு கொடுத்திருந்த முன்பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை திரும்ப தர வேண்டும் என, தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிற பகுதிகளில், லிங்கா படத்தை திரையிட்டுள்ள வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், சென்னை வந்து, ரஜினியை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இப்பிரச்னை குறித்து, லிங்கா பட, வினியோக நிறுவனமான, வேந்தர் மூவீஸ் வெளியிட்ட அறிக்கை:
லிங்கா பட வசூல் பற்றி தவறான தகவல்களை, சில தவறான நபர்கள் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில், பள்ளி அரையாண்டு தேர்வு நடந்து வருவதால், படத்திற்கு வசூல் சற்று குறைந்தது. 19ம் தேதி மாலை முதல், மக்களின் வருகை அதிகரித்துள்ளது. வினியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாக, லிங்கா இருக்கும்.வசூல் விவரம் குறித்து நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது. லிங்கா படம் பற்றி அவதுாறான செய்திகளை பரப்புவோர் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் பிறகே, லிங்கா படம், வசூல் பற்றிய தகவல் வருவது குறைந்துள்ளது.
வினியோக உரிமை:எந்த பிரச்னை வந்தாலும், படத்தை வெளியிடும் வினியோகஸ் தரோ, தியேட்டர் உரிமையாளரோ தான் பொறுப்பு. எந்த வகையிலும், தயாரிப்பாளரை பிரச்னையில் இழுக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் தான், லிங்கா பட வினியோக உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கட்டுப்பாட்டை மீறி, தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் பிரச்னை செய்து வருகின்றனர்.எனவே, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ள தமது படங்களுக்கு என்ன பிரச்னை வருமோ என்ற பயத்தில், புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
முன்னணி நடிகர்களின் புதிய படங்களுக்கு தான் வியாபார ரீதியாக, ஏதாவது ஒரு வழியில், திடீர் திடீரென பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற பிரச்னைகள், இனிமேலும் ஏற்படாமல் இருக்க, தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டு கூட்டம், விரைவில், கூட்டப்பட்டு, ஒரு முடிவு காண வேண்டும் என, தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
வரிசை கட்டும் புது படங்கள் :கிறிஸ்துமஸ் தினத்தன்று, நடிகர் ஆர்யா நடித்த, மீகாமன்; நடிகர் விக்ரம் பிரபு நடித்த, வெள்ளைக்கார துரை; கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், புதுமுகங்கள் நடித்திருக்கும், கயல்; இயக்குனர் ஷங்கர் தயாரித்துள்ள, கப்பல் ஆகிய படங்கள் ரிலீசாகின்றன.பொங்கல் பண்டிகைக்கு, நடிகர் விக்ரம் நடித்த, ஐ; நடிகர் அஜீத் நடித்த, என்னை அறிந்தால்; நடிகர் விஷால் நடித்த, ஆம்பள; நடிகர் கார்த்தி நடித்த, கொம்பன் ஆகிய படங்களை திரையிட ஏற்பாடு நடந்து வருகிறது.
ரஜினி ரசிகர்கள் அதிருப்தி :பல தியேட்டர்களில், லிங்கா படத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பல தியேட்டர்களில், முதல் மூன்று நாட்களுக்கு இணையதள முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு, தியேட்டர் கவுன்டரில், 200 ரூபாய்; தியேட்டருக்கு வெளியே, ரசிகர் மன்றம் என்ற பெயரில், 500 ரூபாய்; பிளாக்கில், 300 ரூபாய் என, விற்கப்பட்டது.
இதனால், அதிருப்தியடைந்த ரஜினி ரசிகர்கள், படம் பற்றிய தவறான தகவல்களை, வாட்ஸ்
அப், டுவிட்டர், பேஸ் புக் போன்ற இணையதள வசதிகள் மூலம் வெளியிட்டனர். இதனால், தியேட்டர்களுக்கு கூட்டம் வருவது குறைந்தது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை
வசூலித்து இருந்தால், இப்பிரச்னை ஏற்பட்டு இருக்காது என, ரசிகர்கள் கூறுகின்றனர்.
- நமது நிருபர் -