பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழில் உதயன், சகுனி படங்களில் நடித்தவர் ப்ரணிதா. கன்னட நடிகையான இவருக்கு பின்னர் இங்கு பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் அவர் நடித்த அத்திரின்டிக்கி தாரடி என்ற படம் ஹிட்டாக அமைந்ததால், பல படங்கள் அவருக்கு கமிட்டாகின.
ஆனால், திரிவிக்ரம் என்ற இயக்குனரின் ஒரு படத்தில் நடித்தபோது ஸ்பாட்டில் அவருக்கும் , ப்ரணிதாவுக்கு லடாய் ஏற்பட்டு விட்டதாம். அதனால் அந்த படத்தில் இருந்தே விலகி விட்டாராம் ப்ரணிதா. அதனால் அந்த படத்தில் இப்போது நித்யாமேனன் நடித்து வருகிறாராம். மேலும், நாகார்ஜூனாவுடன் நடிக்க ஒரு பட வாய்ப்பு வந்தபோதும் அதை ஏற்க மறுத்து விட்ட ப்ரணிதா, தமிழில் மாஸ் படத்தில் நடிப்பதையடுத்து புதிய படங்களை கைப்பற்றி முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்.
மேலும், தமிழில் இவர் இறக்குமதியானபோது ஏகபபட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி விடுவார் என்றெல்லாம்கூட பேசப்பட்டார் ப்ரணிதா. அப்போது அது பொய்யாகி விட்டது. ஊனல், இந்த முறை அப்படி விடமாட்டேன். தமிழில் முன்னணி நடிகையாகாமல் பெங்களூருக்கு திரும்ப மாட்டேன் என்று சவாலாக பேசிக்கொண்டு வருகிறார் ப்ரணிதா.