சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
'கத்தி' படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் ஒரு படம் இயக்க இருக்கிறார். இது ஒரு பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்படுகிற படம். இதில் சோனாக்ஷி சின்ஹா தான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் அறவித்துவிட்டார். இந்நிலையில், இந்தப்படம் தமிழில் வௌியான மௌன குரு படத்தின் ரீ-மேக்காக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
சாந்தகுமார் இயக்கத்தில், வௌிவந்த இப்படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடித்திருந்தார். கல்லூரி மாணவரான அருள்நிதி, சகமாணவர்களாலும், போலீஸ் உள்ளிட்ட சமூகத்தாலும், சைக்கோ என்று முத்திரை குத்தப்பட்டு மனநிலை காப்பாகத்துக்கு தள்ளப்படுவது போன்ற கதை. அருள்நிதி, இப்படத்தில் ஆக்கோரஷ இளைஞராக நடித்திருந்தார். அருள்நிதிக்கு இப்படம் நல்லதொரு பாராட்டை பெற்று தந்தது. இப்போது இந்தப்படத்தை தான் இந்தியில், முருகதாஸ் இயக்க இருக்கிறாராம். மேலும் அருள்நதிக்கான கதையை அப்படியே சோனாக்ஷிக்கு மாற்ற இருக்கிறாராம். இப்படத்தில் சோனாக்ஷி, கோபமான பெண்ணாக நடிக்க இருக்கிறாராம்.
இதுகுறித்து சோனாக்ஷி கூறுகையில், முருகதாஸ் படம் என்றாலே அந்தப்படத்தில் சிறப்பாக ஏதோ ஒன்று இருக்கும். இப்படத்தில் நான் ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் நடிப்பேன் என்று நினைக்கிறேன். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.