ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெட்ராஸ் படத்தில் இடம்பெற்ற "நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே..." என்ற பாட்டை எழுதியவர் உமாதேவி. திருவண்ணாமலை அருகில் உள்ள அத்திபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். பின் தங்கிய விவசாய குடும்பத்திலிருந்து சென்னை வந்து தமிழ் இலக்கியம் படித்து கவிதை எழுதி, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி இப்போது சினிமா பாடலாசிரியராகியிருக்கிறார்.
இவரது கவிதை தொகுப்பை படித்த இயக்குனர் ரஞ்சித், மெட்ராஸ் படத்தில் பாட்டு எழுத வைத்தார். அந்த பாட்டு ஹிட்டாகவே தொடர்ந்து பாடல் வாய்ப்புகள் குவிகிறது உமாதேவிக்கு. ஆனாலும் பாடலாசிரியர் தாமரை போன்று தேர்ந்தெடுத்தே பாடல்கள் எழுதுகிறார். நயன்தாரா 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் நைட்ஷோ படத்தில் ஒரு தாலாட்டு பாடல் எழுதியிருக்கிறார். ஜெய், சுரபி நடிக்கும் புகழ் படத்தில் டூயட் பாடல் எழுதியிருக்கிறார். நல்ல பாடல்களை தேர்வு செய்து தொடர்ந்து எழுத முடிவு செய்திருக்கிறார் உமாதேவி.