ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆக்ஷன் ஹீரோவானால்தான் பத்து கோடி இருபது கோடி என்று சம்பளம் வாங்க முடியும் என்பதை புரிந்து கொண்டுவிட்டார் ஆர்யா. எனவே ஆக்ஷன் சப்பெஜக்ட்டில் நடிக்க முடிவு செய்தார். அப்போது அவரை தேடி வந்த கதைதான் மீகாமன். மகிழ் திருமேனி சொன்ன இந்த ஆக்ஷன் கதையில் ஈர்க்கப்பட்ட ஆர்யா மீகாமன் படத்துக்கு அதீத ஒத்துழைப்பு கொடுத்தார். திட்டமிட்டபடி படம் முடிவடைந்து இதோ 'மீகாமன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வரவிருக்கிறது. ஏதாவது ஏரியா வாங்கி வெளியிடும் எண்ணத்தில் சமீபத்தில் இப்படத்தை பார்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம்.
'மீகாமன்' படம் பார்த்து முடித்ததும் ஹீரோ ஆர்யா, ஹீரோயின் ஹன்சிகா, இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் உதயநிதி.
ஆனால் ஏனோ ஏரியா வாங்கவில்லை. அதே சமயம் 'மீகாமன்' படம் வித்தியாசமான ஆக்ஷன் படமாக உருவாகி இருப்பதாக தன் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லி இருக்கிறார் உதயநிதி. இப்படத்தில் ஆர்யா கிட்டத்தட்ட 15 வில்லன்களை சமாளிக்கிறாராம்.
ஆக்ஷன் ஹீரோன்னா சும்மாவா?