ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஆசாமி, இன்னாருக்கு இன்னாரென்று படங்களை தயாரித்து இயக்கியவர் ஆண்டாள் ரமேஷ். தற்போது நண்டு மை பிரண்டு என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் நடந்து வருகிறது. நேற்று (டிச 18) புதுச்சேரியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கடலூருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வளைவில் திரும்பியபோது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது லேசாக கார் உரசியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாலிபர்கள் தடுமாறி கீழே விழுந்தனர்.
உடனே அவர்கள் விபத்து ஏற்படுத்தியதாக கூறி இயக்குனர் ஆண்டாள் ரமேஷை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் ரமேஷ் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் அருகில் உள்ள அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.