ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த மியா ஜார்ஜ், 'அமர காவியம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அங்கு சுமார் பத்து படங்களுக்கும் மேல் நடித்த அனுபவம் அவருக்கு உண்டு. அவர் நாயகியாக நடித்துள்ள 'கசின்ஸ்' என்ற திரைப்படம் இன்று வெளியாகிறது. தமிழில் தற்போது 'இன்று நேற்று நாளை' என்ற படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்து வருகிறார்.
'அமர காவியம்' படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் இரண்டாவது படம் இது. அறிமுகமான முதல் படத்திலேலேய அழகான, திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் அதிகப் படங்களில் நடிக்காமல் இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். மலையாள நடிகைகளுக்குத்தான் இங்கு அதிக வரவேற்பு உள்ளதே அப்புறம் ஏன் அவர் அதிகப் படங்களில் நடிக்காமல் இருக்கிறார் என்று கேட்டால் நம்மிடம் ஒரு தகவலை வெளிப்படையாகச் சொன்னார்.
“எனக்கு இயக்குனர் யார், நாயகர் யார் என்று பார்த்து பார்த்து நடிப்பது முக்கியமில்லை. அவருடன் நடிக்க வேண்டும், இவருடன் நடிக்க வேண்டும், பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். எனக்கு என் கதாபாத்திரம்தான் முக்கியம். ஒரு நல்ல கதாபாத்திரம் என்னைத் தேடி வரும் போது அதில் கண்டிப்பாக நடிப்பேன். எந்த ஒரு ஆசையுடனும், கனவுடனும் தமிழ்த் திரையுலகத்திற்கு வரவில்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடித்து, நல்ல நடிகை எனப் பெயர் வாங்கினாலே போதும்,” என்கிறார். அஜித், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை, ரஜினியுடன் ஜோடியாக நடிக்க ஆசை என மற்றவர்கள் பேசுவதைப் போல பேச மாட்டேன்கிறாரே....