ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான் என்பது எல்லோருக்கும் தெரியும். வௌ்ளித்திரையில் டாப்பாக இருந்தாலும் சின்னத்திரையிலும் பங்கேற்று வருகிறார் குறிப்பாக அவர் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரபலம். பிக்பாஸ் இப்போது எட்டாவது சீசனாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது நடந்து வரும் சீசன்-8 நிகழ்ச்சி 2015 ஜனவரி 4ம் தேதி வரை நடக்க இருந்தது. இப்போது அதை மேலும் சில வாரங்கள் அதிகரித்துள்ளன. இது மகிழ்ச்சியான விஷயம் தானே, இதில் என்ன ஷாக் என நீங்கள் கேட்கலாம்... விஷயம் அதுவல்ல, ஜன 4ம் தேதிக்கு பிறகு பிக்பாஸ்-8 நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கமாட்டார். அவருக்கு பதிலாக பிரபல இயக்குநர் பராகான் முன்நின்று நடத்த இருக்கிறார். சல்மான் தனது அடுத்தடுத்த படங்களின் பிஸியால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவரால் நடத்த முடியவில்லை, அதனாலேயே பராகான் மாற்றப்பட்டுள்ளார்.
இப்போது சொல்லுங்கள் சல்மான் ரசிகர்களுக்கு இது ஷாக்கான நியூஸ் தானே...!