விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஸ்டுண்ட் ஆப் தி இயர் படம் மூலம் பிரபலமான வருண் தவான், இப்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கும், ''பத்லாபூர்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகையில், ஹீரோ வருண் தவான் படத்தின் கேரக்டரோடு மிகவும் ஒன்றி போய் உள்ளாராம். பத்லாபூருக்கு நிஜமாகவே மக்களோடு மக்களாக ரயில் பயணம் செய்திருக்கிறார். இதுகுறித்து இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் கூறுகையில், வருண் பிறந்தநாளில் பத்லாபூர் படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கை துவக்கினோம். ரயில் போன்று செட்டெல்லாம் அமைத்து காட்சிகளை படமாக்க எண்ணினோம். ஆனால் அது செயற்கையாக இருக்கும் என்ற எண்ணமும் தோன்றியது. அதனால் நிஜமான ரயிலில் படம் பிடிக்க நினைத்தோம். மும்பை - புனே ரயில் வருண் தவான் பயணம் செய்ய வைத்து படமாக்கினோம். அவரும் எந்த பிரச்னையும் இன்றி இயல்பாக மக்களோடு மக்களாக பயணம் செய்து அற்புதமாக நடித்தார். அவருக்கு என்று தனியாக எந்த பாதுகாப்பும் நாங்கள் வழங்கவில்லை, ரியலாக நடித்தார். பீக்கான நேரத்தில் ரயில் காட்சியை படமாக்கியது ரொம்ப த்ரில்லாக இருந்தது என்று கூறியுள்ளார் ஸ்ரீராம் ராகவன்.