ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஒரு காலத்தில் சின்னத்திரையில் சினிமா மட்டுமே ஒளிபரப்பானது. குறும்படங்களை கண்டு கொள்வதில்லை. இப்போது குறும் படங்களுக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் குறும்படங்களுக்கு மவுசு வந்தது. இப்போது எல்லா தொலைக்காட்சிகளும் குறும்படங்களை ஒளிபரப்புகிறது.
இப்போது இதன் அடுத்த கட்டமாக ஆவணப் படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக செய்தி சேனல்களில் ஆவணப்படங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கி உள்ளது. தனி சிலாட்களை ஒதுக்கி ஆவணப்படங்களை ஒளிபரப்புகிறது.
சர்வதேச அளவில் கவனம் பெற்ற ஆவணப்படங்களையும் ஒளிரப்புகிறார்கள். இஸ்ரேல், பாலஸ்தீனம் போர், இலங்கை இறுதியுத்தம், நோபல் பரிசு பெற்ற மலாலாவின் வாழ்க்கை, சேகுவாராவின் கடைசி நாட்கள், காஷ்மீரில் நடப்பது என்ன? என்பது போன்ற சர்வதேச ஆவணப்படங்களும், தர்மபுரி பெண் சிசு கொலைகள், மீத்தேன் வாயு பிரச்சினை, கூடங்குளம் அணுஉலை போன்ற உள்ளூர் ஆவணப்படங்களும் ஒளிபரப்பாகிறது. இதற்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு செலவே இல்லாமல் நல்ல புட்டேஜும் கிடைக்கிறது.