14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை ஆகிய படங்களில் நடித்தவர் அதர்வா. இதில் பரதேசி படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனால் அதன்பிறகு அந்த நல்லபெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏராளமான கதைகளை கேட்டு அதிலிருந்து சில கதைகளை மட்டுமே ஓ.கே செய்து நடித்தார் அதர்வா.
ஆனால், அவர் நடித்த இரும்புக்குதிரை தோல்வியடைந்து அவரை ஏமாற்றி விட்டது. இருப்பினும் அதையடுத்து ஈட்டி படத்தில் தடகள வீரராக நடித்துள்ள அதர்வா, கணிதன் படத்திலும் நடித்திருப்பவர், அந்த படங்கள் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அதையடுத்து, களவாணி, வாகை சூடவா இயககுனர் சற்குணத்தின் புதிய படத்துக்காக தற்போது தஞ்சாவூரில் முகாமிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட களவாணி பட சாயலில் கிராமத்து வாசணையுடன் உருவாகும் இந்த படத்திற்கான டைட்டீலை அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனபோதும், அந்த கதைக்கு புழுதி கிளம்பும்போது என்றொரு டைட்டீலை தற்போது வைத்திருக்கிறாராம் சற்குணம். ஆனால், அந்த டைட்டீல் முதலில் அவருக்கு திருப்தியாக இருந்தபோதும் இப்போது வேறு டைட்டீலாக வைக்கலாமே என்று முடிவு செய்திருக்கிறாராம். அதனால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அதர்வா உள்பட தனது யூனிட்டுடன் அமர்ந்து எந்த மாதிரியான டைட்டீல் வைக்கலாம் என்கிற பரிசீலனையும் நடத்தி வருகிறாராம் சற்குணம்.