ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் புதிய படம் ஆயா வடை சுட்ட கதை. என்.பணீந்திரா இயக்குகிறார், எஸ்.பி.பாலாஜி ஒளிப்பதிவை கவனிக்கிறார், ஷமீர், சிவா இசை அமைக்கிறார்கள். அவிதேஜ், சுபுர்ணா ஹீரோ, ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். "ஆயாவிடம் திருடிய வடையை நரியிடம் பாட்டுபாடி ஏமாந்த காக்கையின் கதை. பழைய ஆயா வடை சுட்ட கதை. இந்த கதையில் ஆயாவிலிருந்து நரி வரை எல்லோருமே புத்திசாலிகள்" என்கிறார் இயக்குனர் பணீந்திரா.
அவர் படத்தை பற்றி மேலும் கூறியதாவது: இது முழுக்க முழுக்க ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கிற கதை. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்று அடுத்த வீட்டுக்காரனுக்குத் தெரியாது. ஆனால் எந்தெந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று வாட்ச்மேன், தண்ணீர் கேன் சப்பளை செய்கிறவர். பால்போடுகிறவர், பேபப்பர் போடுகிறவர், வேலைக்காரிக்குத் தெரியும்.
சதி திட்டம் தீட்டுவதற்காக ஒரு சமூகவிரோத கும்பல் அப்பார்ட்மெண்டில் வீடு எடுத்து தங்குகிறது. பகலில் சகஜமாக எல்லோரிடமும் பழகும் அவர்கள் இரவில் சதி செயலுக்கு திட்டமிடுகிறார்கள். அந்த அப்பார்ட்மெண்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார். இந்த இருவரையும் புரிந்து கொண்ட ஒரு பேப்பர் போடும் இளைஞன் இருக்கிறான். இந்த மூவருக்குள்ளும் நடக்கும் முக்கோண ஏமாற்றுக் கதைதான் படம். ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைக்கிறார்கள். இறுதியில் வென்றது யார் என்பதுதான் படத்தின் முடிவு என்கிறார் பணீந்திரா.