ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விளம்பரத்துறையில் குரு என்று கருதப்படும் பிரஹலாத் கக்கர், 45வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய திரைப்பட விழாவை நிரந்தரமாக கோவாவில் நடத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகச்சரியானது. கோவா ஒரு அற்புதமான இடம். மும்பை மற்றும் தென்னிந்திய திரைப்படத்துறைக்கு அருகே உள்ளது. பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவை போல கோவா திரைப்பட விழாவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது இன்னும் பிரபலமாகும். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வருபவர்கள் அனைவரும் திரைப்படங்களை மட்டும் பார்த்து ரசிப்பதில்லை, அங்கு பார்ட்டிகளுக்கு போகிறார்கள், நல்ல உணவை ரசிக்கிறார்கள், கடற்கரைக்கு செல்கிறார்கள்.
அதேப்போல் நவம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை கோவா முழுவதும் கொண்டாட்டம் தான்! கோவாவின் இயற்கை அழகு ரம்மியமான கடற்கரைகள் சுண்டி இழுக்கும் சுவையான கோவாவின் உணவு வகைகள், திரைப்பட விழாவிற்கு வருபவர்களுக்கு ஸ்பெஷல் அட்ராக்ஷன்கள்.
இவ்வாறு பிரஹலாத் கக்கர் கூறினார்.
கோவா திரைப்பட விழாவில் மத்திய ராணுவ அமைச்சரும், முன்னாள் கோவா முதல்வருமான மனோகர் பரிக்கர், இன்னும் பத்து மாதங்களில் கோவா திரைப்பட விழாக்கள் நடத்த நிரந்தரமான கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாக்களை நிரந்தரமாக கோவாவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது என்றார்.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-