ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், கோவிந்தா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து , சமீபத்தி்ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஹாப்பி எண்டிங் படம் மற்றும் திரையுலக அனுபவம் தொடர்பாக நடிகர் சயீப் அலி கான் பகிர்ந்து கொண்ட தகவல்கள்...
தாங்கள் நடித்துள்ள ஹாப்பி எண்டிங் படம் குறித்து..
ஹாப்பி எண்டிங் படத்தில், நான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட கேரக்டர்கள். காமெடி படமான இதில், எனது கேரக்டரை தாங்கள் விரும்புவீர்கள். யுடி ஜெயிட்டிலி மற்றும் யோகி என்ற இரண்டு கேரக்டர்களில், இப்படத்தில் நடித்துள்ளேன். யுடி ஜெயி்ட்டிலி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் எழுத்தாளர். மிகவும் சோம்பேறி. எப்போதும் தனது அடுத்த படைப்புகள் குறித்த ஆழ்ந்த சிந்தனையிலும், மேலும் அதுகுறித்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார். நீங்கள் படத்தைப் பார்க்கும் போது யுடி எதிர்கொள்ளும் பிரச்னைகள், தங்களுக்கு காமெடியாக தெரியும். யோகி கேரக்டர், யுடிக்கு முற்றிலும் மாறுபட்டது. இரண்டிற்கும் வெவ்வேறான நடிப்பு மற்றும் முகபாவனைகள். ஒரே சீனில், இரண்டு விதமான நடிப்பு மற்றும் முகபாவனைகளை இதில் வெளிப்படுத்தியுள்ளேன். இது எனக்கு புதுவித அனுபவமாக இருந்தது.
கோவிந்தா உடன் நடித்த அனுபவம்...
கோவிந்தா என்று கூறினாலே, அவரது காமெடி நடிப்பு தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். இந்த படத்தில், அவர் நடிப்பில் மேலும் மெருகேறி உள்ளார். அவரைப் பார்த்து எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. படத்தில் அவரது நடிப்பை பார்த்து, இந்த கேரக்டருக்கு இவரைத்தவிர, வேறு யாரும் பொருத்தமானவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவருடைய ஒவ்வொரு நடிப்பையும், என்ஜாய் பண்ணி ரசித்தேன்.
இயக்குனர்கள் பர்கான் அக்தர் மற்றும் விஷால் பரத்வாஜ் உடன் மீண்டும் இணைவீர்களா?
நான் எனது திரையுலகின் குறிப்பிடத்தக்க ஹிட்களை, தாங்கள் மேற்கோள் காட்டிய பர்கான் இயக்குனர்கள் அக்தர் மற்றும் விஷால் பரத்வாஜ் மூலம், எனது ரசிகர்களுக்கு அளித்துள்ளேன். தற்போது விஷால் பரத்வாஜ், ஓம்காரா படத்தில் பிசியாக உள்ளார். இதற்கு பிறகு, தான், விஷால் பரத்வாஜ் உடன் படம் பண்ண உள்ளேன். ஆனால், எனது ரசிகர்களோ, இதற்குள்ளாகவே, ஓம்காராவிற்கும், எங்களது அடுத்த படத்திற்கும் இடையே ஒப்பீடு செய்யத் துவங்கி விட்டனர். எதிர்காலத்தில், புதுமாதிரியான, முற்றிலும் வேறுபட்ட வகையிலான படங்களை சேர்ந்து கொடுப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதேநிலை தான், பர்கான் அக்தருக்கும் உள்ளது. தற்போது தான் நடித்து வரும் படத்தை ரீமா காட்கி இயக்கி வருகிறார். வருங்காலத்தில், பர்கான் அக்தருடன் இணைந்து மேலும் பல வெற்றிப்படங்களை கொடுப்பேன்.
ஷாரூக் கானுடன் மீண்டும் இணைவீர்களா?
ஷாரூக் கானுடன் தான் மீண்டும் இணைந்து நடிப்பது என்பதை, அவரது பிரமாண்ட படத்தில், தான் சிறிய கேரக்டரில் நடிப்பதாக உணர்கிறேன். நான் நடிக்கும் படங்களில், எப்போதுமே, நான் தான் பெரிதாக தெரிய வேண்டும் என்ற கொள்கை உடையவன். கல் ஹோ நா ஹோ போன்ற ஷாரூக் கான் நடிக்கும் படங்களில், எனக்கு மிகப்பெரிய கேரக்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. சினிமா என்ற உலகத்தில், ஹீரோக்கள், மிக முக்கிய கேரக்டர்களாக இருக்க வேண்டும். இதற்கு கடின உழைப்பு என்பது அவசியமாகிறது. இது தவறும்பட்சத்தில் தான், இரண்டாவது முக்கிய கேரக்டர்களில் நடிக்க வேண்டி வருகிறது. இரண்டாவது முன்னணி கேரக்டரில் தான் நடிக்க மேலும் சில ஆண்டுகள் ஆகலாம். இதன்காரணமாக, ஷாரூக் கானுடன் இணைந்து நடிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றே கூறலாம்.
கோ கோவா கோன் தொடர்ச்சி உண்டா?
நிச்சயமாக, அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளோம். அடல்ட் காமெடி கோணத்தில், படங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
பண்டிகைளின் போது சல்மான், ஷாரூக், அமீர் கான் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களை தவிர சிறிய நடிகர்களி்ன் படங்கள் வருவதில்லையே? இதுகுறித்த உங்கள் கருத்து...
அமீர் கான், சல்மான் கான் மற்றும் ஷாரூக் கான் உள்ளி்ட்ட பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே பண்டிகைகளின் போது திரையுலகிற்கு வருவது அவர்களுக்கு மட்டுமே நன்மை பயப்பதாக இருக்கும். திரையுலகை சேர்ந்த மற்றவர்களும் பயன்பெறும் வகையில், மற்ற நடிகர்களின் படங்களையும், பண்டிகைகளின் போது வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
படங்களை எதை வைத்து தேர்ந்தெடுக்கிறீர்கள்?