ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உடல் உறுப்புகள் தானம், பல உயிர்களை காப்பாற்றுகிறது என்பதை வலியுறுத்தும் படம். பிரபல ஆஸ்திரேலிய இயக்குனர் பால் காக்ஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இரண்டு இந்திய நடிகைகள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலோகங்களில் சிற்பங்களை உருவாக்கும் பிரபல ஆர்ட்டிஸ்ட் ராபர்ட்டுக்கு கல்லீரலில் புற்றுநோய் தாக்குகிறது. ராபர்ட்டின் மனைவி, சிறு பெண் அவரை கவனித்து கொள்கிறார்கள். இந்தியாவிலிருந்து மாயா என்ற இளம்பெண் ( சஹானா கோஸ்வாமி), ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது அங்கிளை (அவரும் கேன்சர் நோயாளி, இறந்து விடுகிறார்) சந்தி்க்க வருகிறார். அங்கிளின் மனைவி அத்தை சீமா பிஸ்வாஸ். இவர்தான் பூலான் தேவியைப் பற்றி பாண்டிட் குயின் படத்தின் கதாநாயகி. தேசிய விருதும் பெற்றவர்.
ராபர்ட்டிற்கும், மாயாவிற்கும் அறிமுகமாகிறது. நெருக்கமாக பழகுகிறார்கள்.காதல் ஏற்படுகிறது. ராபர்ட்டுக்கு உற்ற துணையாக ஆறுதலாக இருக்கும் மாயா, மின்னல் வேகத்தில் சில வினாடிகள் ஒரு டாப்லெஸ் படுக்கை அறை காட்சியும் உண்டு. அவரது சிற்பங்களை ரசிக்கிறாள்.
ராபர்ட்டிற்கு மாற்று கல்லீரல் பொருத்தும் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். ராபர்ட் பிழைத்துக்கொள்கிறார். காதல், நம்பிக்கை, தைரியம், தியாகம் ஆகியவற்றின் பயணமாக இந்த படத்தை, பால் காக்ஸ் அமைத்திருக்கிறார். உடல் உறுப்புகள் தானத்தை வலியுறுத்துகிறார்.
சஹானா கோஸ்வாமி, சில இந்தி, வங்காளம், ஆங்கிலம் படங்களில் நடித்திருக்கிறார். நல்ல முக அமைப்பு, தோற்றம், தென்னிந்திய மொழிப்படங்களில் நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்க விரும்புவதாக சஹானா கூறினார். இந்தப்படம் திரையிடப்பட்ட போது பால் காக்ஸ், சஹானா கோஸ்வாமி கெளரவிக்கப்பட்டார்கள்.
கோவாவிலிருந்து எஸ்.ரஜத்.