சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கோவா திரைப்பட விழா துவக்க நாளன்று, ஐநாக்ஸ்-2 திரையரங்கில், மோகன்லால், மீனா நடித்த மலையாளம் சூப்பர் ஹிட் படமான "திருஷ்யம்" திரையிடப்பட்டது. நிகழ்ச்சிகளை தெரிவிக்கும் புத்தகத்திலும் சரி, டெலிகேட்ஸ்களுக்கு தரப்பட்ட கம்ப்யூட்டர் டிக்கெட்களிலும் படம், ஐநாக்ஸ்-2 அரங்கில், (21.11.14) இரவு 8.30 மணிக்கு திரையிடப்படும் என்று அச்சாகியிருந்தது. கோவா பனாஜி நகரில் வசிக்கும் நிறைய மலையாளிகளும், டெலிகேட்கள், மீடியாக்காரர்கள் என்று பல நூற்றுக்கணக்கானவர்கள், இரவு எட்டு மணியிலிருந்தே தியேட்டர் முன்பு வரிசையில் டிக்கெட்களுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் கியூ நகரவே இல்லை, நின்று நின்று அலுத்துப்போனவர்கள் தியேட்டரில் விசாரித்தபோது, சற்றும் பதட்டப்படாமல், எங்களுக்கு இந்தப்படம் இரவு ஒன்பது மணிக்குத்தான் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று வருத்தப்படாமல் அந்த நிர்வாகி கூறினார். ஏன் இந்த முரண்பாடு? நீண்ட காத்திருப்புக்கு பிறகு, 09.15 மணிக்குத்தான் படம் ஆரம்பித்தது. அரங்கு நிரம்பி வழிந்த காட்சி.
இந்த திரைப்பட விழாவில் முதல்முறையாக, திரைப்பட விழா வளாகத்திற்கு வர முடியாத பொதுமக்களுக்கு, கம்பார் கால்பந்து மைதானத்தில் ஏழு படங்கள் இலவசமாக திறந்தவெளியில் திரையிடப்படுகின்றன. ரிச்சர்ட் ஆட்டன்பர்ரோவின் "காந்தி" (1982), ஷாரூக் கான், மாதுரி தீட்சித் நடிக்கும் தில் தோ பாகல் ஹை (1997) உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.
கோவாவில் இருந்து எஸ்.ரஜத்