ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சின்னத்திரை வட்டாரத்தில் டிடி என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர் திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை கல்லூரி ஒன்றில் எலெக்ட்ரானிக் மீடியா படிக்கும் முதுகலை மாணவர்களுக்காக நடந்த தேர்தலில் "டிடி காப்பி வித் டிடி" நிகழ்ச்சியை எப்படி சலிக்காமல் கொண்டு செல்கிறார்கள். செலிபிரிட்டியை எப்படி கையாளுகிறார்? என்ன மாதிரி கேள்விகள் கேட்கிறார்-?" என்று விளக்கும்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி இணையதளத்தில் வைரலாக பரவி பலரும் அதற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபற்றி திவ்யதர்ஷினி கூறியதாவது: அதை கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இணைய தளத்தில் வெளியான அந்த கேள்வித் தாளையும் பார்த்தேன். நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர்கிறேன். காப்பி வித் டிடி இந்த அளவுக்கு ரீச்சாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் அந்த கல்லூரிக்கு சென்று பதில் எழுதிய மாணவர்களை சந்தித்து பேச ஆவலாக இருக்கிறேன். நான் ஒரு காலத்தில் கல்லூரியில் லெக்சரராக பணியாற்றி இருக்கிறேன். என்றார்.