ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த சில வருடங்களாக பெரிய நட்சத்திரங்கள் நடித்த தமிழ்ப்படங்கள் அனைத்தும் கேரளாவில் தமிழ்ப்படங்களாகவே வெளியாகி வருகின்றன.
அப்படி வெளியாகும் தமிழ்ப்படங்கள் நேரடி மலையாளப்படத்தை விட அதிகமான வசூலையும் ஈட்டி வருகின்றன.
இந்நிலையில், நவம்பர் 14-ஆம் தேதி ரிலீசா உள்ள வசந்தபாலன் இயக்கியுள்ள காவியத்தலைவன் படமும் அதே நாளில் கேரளாவில் வெளியாகிறது.
வழக்கமாக கேரளாவில் தமிழ் படங்கள் நேரடியாகவே வெளியிடப்படும். ஆனால் காவியத்தலைவன் படத்தை பிரதி நாயகன் என்ற பெயரில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.
இப்படத்தை மலையாளத்தில் ஏன் மொழிமாற்றம் செய்கிறார்கள்?
காவியத்தலைவன் படத்தின் கதாநாயகன்களில் ஒருவரான பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகர். தவிர மற்றொரு நாயகனான சித்தார்த்தும் மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். மற்றும் காவியத்தலைவன் படத்தில் நடித்துள்ள நாசர், வேதிகா ஆகியோரும் மலையாளப் படங்களில் நடித்தவர்கள்.
எனவே காவியத்தலைவன் படத்தை மலையாளப் படமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க பிரதிநாயகன் என்ற பெயரில் டப் செய்கிறார்கள்.
மற்றொரு காரணம்... காவியத்தலைவன் படத்தின் கதை.
மேடை நாடக கலைஞர்களின் கதையைச் சொல்லும் இப்படத்தை கேரள ரசிகர்கள் தமிழில் பார்ப்பதை விட, மலையாள மொழியில் பார்க்கவே விரும்புவார்கள் என்று எண்ணியே டப் செய்கிறார்களாம்.
பிருத்திவிராஜ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான செல்லுலாய்ட் படத்தை போலவே காவியத்தலைவன் படமும் ஒரு பீரியட் படமாக அமைந்திருப்பதும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டதற்கு காரணமாக சொல்கிறார்கள்.