ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1990ல் மலைச்சாரல் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தங்கர்பச்சான். அதையடுத்து தர்மசீலன், மோகமுள், வான்மதி, காதல் கோட்டை என பல படங்களில் பணியாற்றிய அவர், 2002ல் அழகி படம மூலம் இயக்குனராகவும் உருவெடுத்தார். அதன்பிறகு சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்து இயக்கினார்.
ஆனால், பிரபுதேவா-பூமிகாவை வைத்து அவர் இயக்கிய களவாடிய பொழுதுகள் இன்னும் திரைக்கு வரவில்லை. அதனால் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர், விரைவில் அப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் ஒளிப்பதிவாளராக களத்தில் இறங்கியிருக்கிறார் தங்கர்பச்சான்.
மெட்ராஸ் படத்தில் அன்பு என்ற முக்கிய வேடத்தில் நடித்திருந்த கலையரசன் கதாநாயகனாக நடிக்கும் மைலாஞ்சி என்ற படத்திற்குதான் தற்போது அவர் ஒளிப்பதிவு செய்கிறார். தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்வதில் சிறந்தவர் என்பதால். அவரது தொழில்நுட்பம் பற்றி அறிந்த சில இயக்குனர்கள் அடுத்தடுத்து அவருக்கு சான்ஸ் கொடுக்க தயாராகி வருகிறார்கள். அதனால் நீண்ட இடைவேளைக்குப்பிறகு ஒளிப்பதிவாளராக மீண்டும் பிசியாகிறார் தங்கர்பச்சான்.