மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
விஜயகாந்த் நடித்த கஜேந்திரா என்ற படத்தில் நடித்தவர் புளோரா. அதையடுத்து குஸ்தி, உச்சக்கட்டம் உள்பட சில படங்களிலும் நடித்தார். ஆனால் வேகமாக வளர்ந்து வந்த நேரத்தில், ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார். அதையடுத்து வெளியே வந்து நான் நிரபராதி என்பது போல் பேட்டிகள் கொடுத்தார்
ஆனபோதும், புளோராவுக்கு சான்ஸ் கொடுத்தால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று சினிமா உலகம் அவரை நிராகரித்தது. இருப்பினும், சில ஆண்டுகளாக அமைதி காத்து வந்த புளோரா, தற்போது மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் இறங்கியிருக்கிறார். ஆனால் இனிமேல் தனக்கு கதாநாயகி வேடம் யாரும் தர மாட்டார்கள் என்பதால், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார் புளோரா.
அதன் காரணமாக, தற்போது செந்தில் நாதன் இயக்கி வரும் பார்வை என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் புளோரா. கதைப்படி இந்த படத்தின் டைரக்டர் செந்தில் நாதன் டைரக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். அப்படி அவர் படத்துக்குள் எடுக்கும் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில்தான் புளோரா அதிரடி நடனமாடியிருக்கிறாராம். பெரிய அளவில் ஆடைகுறைப்பு செய்யவில்லை என்றாலும், அசத்தலான உடல் அசைவுகளை வெளிப்படுத்தி கலக்கல் நடனமாடியிருக்கிறாராம். அதனால், இந்த படம் திரைக்கு வரும்போது முன்னணி ஹீரோக்களுடன் நடனமாடும் வாய்ப்புகளும் எனக்கு கிடைக்கும் என்று கோடம்பாக்கத்தில் தொடை தட்டிக்கொண்டு திரிகிறார் புளோரா.